தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை தொட வேண்டும் என முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் புதிய முதலீடுகளை ஈர்த்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளை படு தீவிரமாக செய்து வருகிறது.
சமீபத்தில் கூட இந்தியாவில் எந்தொரு மாநிலமும் செய்திடாத வகையில் உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காக கொண்டு விண்வெளி துறையில் புதிய கொள்கையை அறிமுகம் செய்து முதலீட்டை ஈர்க்க உள்ளது தமிழ்நாடு அரசு. இந்த சூழ்நிலையில் தற்போது புதிதாக தமிழ்நாடு FMCG துறையில் தடாலடியாக வளர்ச்சி அடைய துவங்கியுள்ளது.

தமிழ்நாடு FMCG மையமாக மாற இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான பிரிட்டானியா, கோத்ரெஜ், டாபர், பெப்ஸிகோ மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்றவை தமிழ்நாட்டில் புதிய உற்பத்தி ஆலைகளை அமைக்கின்றன. இந்த முதலீடுகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் விவசாயிகளுக்கு பயனளிக்கின்றன.
கோத்ரெஜின் சென்னை ஆலை: கோத்ரெஜ் கன்ஸ்யூமர்ஸ் நிறுவனம் (ஜி.சி.பி.எல்), சென்னையில் ஒரு புதிய உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. இந்த ஆலையில் சிந்தால், குட்நைட், ஏர் மற்றும் கோத்ரெஜ் எக்ஸ்பர்ட் டை உள்ளிட்ட பல தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் 515 கோடி ரூபாய் முதலீட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒன் ஹப் சென்னை தொழிற்பூங்காவில் இந்த ஆலை அமைந்துள்ளது. இதில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன், 50% பெண் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
டாபரின் திண்டிவனம் தொழிற்சாலை: டாபர் இந்தியா, திண்டிவனத்தில் உள்ள சிப்காட் உணவு பூங்காவில் தனது முதல் தென்னிந்திய உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த 400 கோடி ரூபாய் முதலீட்டில், முதல் கட்டமாக 135 கோடி ரூபாய் செலவிடப்படும். இந்த ஆலையில் டூத்பேஸ்ட், தேன், ஓடோனில் மற்றும் ரியல் ஜூஸ் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்யும். 250 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் ஆயிரக்கணக்கான மறைமுக வேலைகளை உருவாக்கும் இந்த தொழிற்சாலை அருகிலுள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு விளைபொருட்களை விற்க புதிய வாய்ப்புகளை வழங்கும்.
பெப்ஸிகோவின் மணப்பாறை தொழிற்சாலை: இந்தியாவின் முன்னணி குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோ, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை சிப்காட் உணவு பூங்காவில் 28 ஏக்கர் நிலத்தில் உற்பத்தி ஆலை அமைக்கிறது. 500 கோடி ரூபாய் முதலீட்டில், உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் உற்பத்தி செய்யும் இந்த ஆலை, உள்ளூர் விவசாயிகளுக்கு பயனளிக்கும். இந்த முதலீடு, தமிழ்நாட்டின் உணவு பதப்படுத்தல் துறையை வலுப்படுத்துகிறது.
HUL-இன் புதிய தொழிற்சாலை: ஹிந்துஸ்தான் யூனிலீவர் (HUL), திருச்சி அருகே மணப்பாறையில் புதிய உற்பத்தி ஆலை அமைப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ஆலை, பூஸ்ட், ஹார்லிக்ஸ் மற்றும் பிற மால்ட் பானங்களை உற்பத்தி செய்வதாக தெரிகிறது. இந்த முதலீடு, தமிழ்நாட்டின் எஃப்.எம்.சி.ஜி துறையில் மேலும் வளர்ச்சியை ஏற்படுத்தி, உள்ளூர் பொருளாதாரத்தை பலப்படுத்தும்.
இந்த 4 நிறுவனங்களை தொடர்ந்து பிரிட்டானியா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான் பகுதியிலும் தொழிற்சாலை வைத்து இயங்கி வருகிறது.
தமிழ்நாடு FMCG துறையில் திடிரென வேகமாக வளர என்ன காரணம்..?: தமிழ்நாட்டின் வலுவான உள்கட்டமைப்பு, திறமையான பணியாளர்கள் மற்றும் முற்போக்கான தொழில் கொள்கைகளால் எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் வேகமான வளர்ச்சிக்கு மிகவும் சாதகமாக உள்ளது, இதேபோல் தமிழ்நாடு அரசு தற்போது போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ், கிடங்கு என பல பிரிவுகளில் கட்டமைப்பை மேம்படுத்துவதும் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் சிப்காட் தொழிற்பூங்காக்கள், புதிதாக அமைக்கப்படும் தொழிற்பூங்காக்கள நன்கு இணைக்கப்பட்ட பாதைகள், மின்சாரம், நீர் விநியோகம் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு வசதிகளை வழங்குகின்றன. இது FMCG துறை நிறுவனங்களை மட்டும் அல்லாமல் பிற துறை நிறுவன முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications