குஜராத்துக்கு படம் காட்டும் தமிழ்நாடு.. இந்தியாவிலேயே 3வது இடம்.. வரலாற்று உச்சத்தில் ஏற்றுமதி!

இந்தியாவில் மாநிலங்களுக்கு மத்தியில் எப்படி முதலீட்டு ஈர்ப்பதில் போட்டியிருக்கிறதோ, அதேபோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியிலில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்பதிலும் பெரும் போட்டி இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடுக்கு மத்தியில் பெரும் போட்டி இருந்து வரும் வேளையில் தமிழ்நாட்டின் ஏற்றுமதி திமுக ஆட்சி காலத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

குஜராத்துக்கு படம் காட்டும் தமிழ்நாடு..  இந்தியாவிலேயே 3வது இடம்.. வரலாற்று உச்சத்தில் ஏற்றுமதி!

நாடாளுமன்றத்தில் திமுக எம்எல்ஏ ஜி செல்வம் மற்றும் ராணி ஸ்ரீகுமார் ஆகியோரின் மாநிலங்களின் ஏற்றுமதி பங்கீடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல், தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு 2023-24ஆம் நிதியாண்டில் 43.2 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி மதிப்பு 2025-26ல் 58.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி பங்கீட்டில் தமிழ்நாட்டின் பங்கு 13.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் உற்பத்தி அதிகரிக்க முக்கியமான காரணம் உற்பத்தி துறையில் பதிவான அதிரடி வளர்ச்சி தான், குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல் மற்றும் இன்ஜினியரிங் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டின் 58.9 பில்லியன் டாலர் மொத்த ஏற்றமதியில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு பங்கீடு மட்டும் 19.97 பில்லியன் டாலர், இது நாட்டின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஏற்றுமதியில் சுமார் 41.63 சதவீதமாகும்.

இதேபோல் தமிழ்நாடு மற்ற துறையிலும் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 35.59 சதவீதம், வாகனங்களின் ஏற்றுமதியில் 33.38 சதவீதம், டெக்ஸ்டைஸ் துறையில் 23.13 சதவீதம் என பெரும் ஆதிக்கம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட முக்கிய காரணம் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து தமிழ்நாட்டில் 2014-15ல் இருந்து 12523 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 94 துறைமுக திட்டங்கள் செயல்படுத்தியுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதுக்குறித்து முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறுகையில் 2021-26 வரையிலான திமுக அரசு மாநிலத்தின் தொழிற்துறை உற்பத்தி, விரிவாக்கம், ஏற்றுமதியை மேம்படுத்த கொள்கை அளவை தாண்டி ஒட்டுமொத்த எகோசிஸ்டத்தையும் மேம்படுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

இந்த நிலையில் புதிதாக ஆட்சியில் அமைந்துள்ள விஜய் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் 58.9 பில்லியன் டாலர் என்ற அளவை 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும், இதன் மூலம் தமிழ்நாடு 2வது இடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவை பின்னுக்குத்தள்ளி, முதல் இடத்தில் குஜராத்தை நெருங்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+