கேட்டவுடன் கொடுத்த மு.க.ஸ்டாலின்.. அந்த மனசு தான் சார் கடவுள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் 2 குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பரிசை வழங்கியுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு தானியங்கி முறையில் நகரும் சக்கர நாற்காலி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அதே வேளையில் முகக் குறைபாடுடன் பிறந்த சிறுமி ஒருவருக்கு ஒரு வீட்டையும் பரிசாக வழங்கியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் 9 வயதான தன்யா என்ற சிறுமி தனது உடல்நிலை குறித்து சமூக ஊடகங்கள் மூலம் தமிழக முதல்வரை அணுகியுள்ளார். இவர் ஒரு அரிய வகை முகக்குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். "தன்யாவின் தந்தையான ஸ்டீபன் ஒரு தையல் தொழிலாளி. பள்ளி மற்றும் அக்கம் பக்கத்தினர் யாரும் இவரிடம் பேசவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்களும் இவரை ஒதுக்கி வைத்துள்ளனர். அதோடு இந்த குடும்பத்திற்கு வாடகை வீடும் கிடைக்கவில்லை", என்று அமைச்சர் எஸ்.எம்.நாசர் கூறினார்.

 கேட்டவுடன் கொடுத்த மு.க.ஸ்டாலின்.. அந்த மனசு தான் சார் கடவுள்!

2022-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 16-ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியவந்தது. அடுத்த நாளே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும், 15 பேர் கொண்ட குழுவை அமைத்து ஒவ்வொரு மருத்துவரும் வெவ்வேறு பிரச்சனைகளை கண்காணித்து வந்ததாகவும், கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும், இன்னும் ஒரு சிகிச்சை நிலுவையில் உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு முதல்வர் அடிக்கடி சென்று இவரை பார்த்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது தான்யாவிற்கு பள்ளியில் அட்மிஷன் கிடைத்துள்ளது. வாடகை வீடு கிடைக்காமல் அவருடைய குடும்பம் கஷ்டப்படுவதை தெரிந்துகொண்டு பாக்கம் கிராமத்தில் மூன்று சென்ட் நிலத்தில் அவருக்கு வீடும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடத்தின் கீழ் வீடு கட்டி வழங்கி உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று தன்யாவின் பெற்றோர்களான ஸ்டீபன் மற்றும் சௌபாக்கியாவிடம் புதிய வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டது. அதே விழாவில் பண்ணவாடு தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான அனுசியா என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு சக்கர நாற்காலியையும் முதல்வர் பரிசாக வழங்கினார்.

இவர் மூன்று பட்டங்கள் பெற்ற ஒரு பட்டதாரி. மேலும் பகுதிநேர ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். தன் சிரமங்களை விளக்கி சிஎம் செல்லுக்கு கடிதம் எழுதியுள்ளார். "இதன் மூலம் தற்போது ஒரு தானியங்கி சக்கர நாற்காலியை வழங்கியுள்ளோம். அவருக்கு ஒரு வேலை வழங்கவும் ஏற்பாடு செய்வோம்", என்று நாசர் கூறியுள்ளார். நிகழ்ச்சிகள் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+