தமிழகத்தில் மின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இன்று முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்துவது குறித்து சமீபத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் தற்போது மின் கட்டண உயர்வுக்கு மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து இன்று முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
8 ஆண்டுகளுக்கு பின் உயர்வு
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாத நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம் 2026 - 27 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என்றும், 100 யூனிட் மின்சாரம் தேவையில்லை என்று நினைப்பவர்கள் மின்சார வாரியத்திற்கு எழுதிக் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வின் முழு விவரங்கள்
இந்த நிலையில் புதிய மின் கட்டணத்தை எவ்வளவு யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தினால் எவ்வளவு மின் கட்டணம் அதிகம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
200 யூனிட்
100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் மின் கட்டணம் இல்லை. 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 ரூபாய் என 2 மாதங்களுக்கு ரூ 55 கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.
300 யூனிட் முதல் 500 யூனிட் வரை
300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு ரூ.145 அதிக கட்டணமும், 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு 295 ரூபாய் அதிக கட்டணமும் நுகர்வோர் கட்ட வேண்டும். அதேபோல் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு 595 ரூபாய் அதிக கட்டணம் கட்ட வேண்டும்.
600 யூனிட் முதல் 900 யூனிட் வரை
600 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு கூடுதலாக 310 ரூபாயும், 700 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2மாதங்களுக்கு கூடுதலாக 550 ரூபாயும் 800 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு கூடுதலாக 790 ரூபாயும் 900 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு கூடுதலாக 1130 ரூபாயும் கட்ட வேண்டும்.
மின்வாரிய இணையதளம்
மேலும் மின் கட்டண உயர்வு குறித்த அனைத்து தகவல்களும் மின்சார வாரிய இணையதளங்களில் மின்சார கட்டண உயர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழக்த்தில் மின் கட்டணம் உயர்தப்பட்டுள்ள அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications