கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் புதிதாக மினி பேருந்து சேவைகளை கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசினை பொருத்தவரை தற்போது ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது ஏற்கனவே ஓசூரில் டாடா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய ஆலைகளை அமைத்துள்ளன.
அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அரசு தொழில் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மினி பேருந்து சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கு அது அரசு முடிவு
இதன்படி ஓசூரில் 17 மினி பேருந்துகளுக்கும் கிருஷ்ணகிரியில் 12 மினி பேருந்துகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் வாகன போக்குவரத்து இணைப்பு இல்லாத பகுதிகளையும் இணைக்கும் நோக்கில் இப்படி ஒரு முடிவினை தமிழ்நாடு அரசு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு தரப்பில் மாநிலத்தில் மினி பேருந்து சேவைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் முதன்முறையாக மினி பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டது. பின்னாளில் அந்த சேவை நிறுத்தப்பட்டது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளின் மீண்டும் மினி பேருந்து சேவையை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதன்படி டிசம்பர் மாதம் முதல் மினி பேருந்து சேவைகளை தொடங்கும் பணியில் போக்குவரத்து துறை மும்மரமாக இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் மினி பேருந்து சேவை தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஒரு கிராமத்தில் குறைந்தது 100 குடும்பங்கள் இருந்து இதுவரை அங்கு அரசு பேருந்துகளோ அல்லது தனியார் பேருந்துகளோ இயக்கப்படாமல் இருந்தால் அங்கே மினி பேருந்து சேவைகள் கொண்டுவரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
70 சதவீதம் பேருந்து வசதியற்ற பகுதிகளையும் 30 சதவீதம் பேருந்து வசதி இருக்கும் பகுதிகளையும் இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் உருவாக்கப்பட உள்ளது. புதிய திட்டத்தின் படி 25 கிலோ மீட்டருக்குள் இயக்குவதற்கு மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும். இதில் 17 கிலோ மீட்டர் தூரம் பேருந்து சேவை இல்லாத வழித்தடமாகவும் 8 கிலோமீட்டர் பேருந்து சேவை இருக்கும் வழித்தடமாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications