சென்னை: தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ சார்பாக சென்னை, மதுரை, கோயம்புத்தூரில் தொழில்துறைகளுக்கான ஆய்வு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக டிடி நெக்ஸ்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தற்போது நவீன தேவைகளுக்கு ஏற்ப கல்லூரியில் பயிலும் மாணவர்களை ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு தொழில்துறைகளை சார்ந்த ஆய்வு பூங்காக்களை சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தோடு இணைந்து இந்த ஆய்வு பூங்காக்களை நிறுவ இருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி துறையின் உயர் அதிகாரி ஒருவர் டிடி நெக்ஸ்டுக்கு அளித்துள்ள பேட்டியில் மாணவர்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும் ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு, வாகன உற்பத்தி மற்றும் மின்சார வாகன உற்பத்தி ஆகிய துறைகளுக்கும் இந்த ஆய்வு பூங்காக்கள் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். கல்லூரியில் பயிலும் போதே மாணவர்களுக்கு தொழில் முனைவுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும் வளர்ந்து வரும் நிறுவனங்களோடு இணைந்து முக்கியமான ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த ஆய்வு பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார் செய்யப்படும் என தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .தற்போதைக்கு சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய மூன்று நகரங்களில் இந்த ஆய்வு பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன என்றும் இதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி விரைவில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அவர்களின் ஆய்வு மற்றும் அது தற்போதைய தொழில்துறையோடு எவ்வாறு ஒத்துப் போகிறது அதேவேளையில் தற்போது தொழில்துறையினருக்கு எந்த பிரிவுகளில் எல்லாம் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரக்கூடிய ஒரு முயற்சியாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதனால் மாணவர்கள் செய்யக்கூடிய ஆய்வுகளும் அதனால் கிடைக்கும் முடிவுகளும் நேரடியாக தொழில்துறைக்கு பயன்படும். இவ்வாறு கல்லூரியில் பயிலும்போதே மாணவர்களுக்கு தொழில் துறையினரோடு ஒரு தொடர்பு ஏற்படும் போது எதிர்காலத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் பிரகாசமாகிறது என தெரிவித்துள்ளார்.
டிட்கோவை பொறுத்தவரை ஆய்வு பூங்காக்களை மேம்படுத்துவதில் நீண்ட அனுபவம் உள்ளது என்பதால் தமிழ்நாடு அரசு டிட்கோவுடன் இணைந்து இதை செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பணிகள் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும் எனக் கூறப்படுகிறது. கூடிய விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தமிழக அரசு இதற்கான நிதிகளை ஒதுக்கீடு செய்த உடன் இந்த ஆய்வு பூங்காக்களை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Written by: Devika
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications