இந்த ஆண்டு இரண்டாவது அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றொரு உற்சாகமான செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாநில அரசு ஊழியர்களுக்கான சிறப்பு தீபாவளி போனஸை விரைவில் வெளியிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் இரண்டாவது அகவிலைப்படி உயர்வில் 3 சதவீத அதிகரிப்பை எதிர்பார்க்கிறார்கள். அப்படியானால் அகவிலைப்படி மொத்தமாக 53 சதவிதாமாக உயர்த்தப்படும் என்று கருதுகின்றனர். உதாரணமாக ஒரு அரசு ஊழியரின் சம்பளம் 50,000 ரூபாய் என வைத்துக் கொள்வோம்.

அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்தால் அவருக்கு மாதம் 1,500 ரூபாய் அதிகமாக கிடைக்கும், அப்படி பார்த்தால் ஆண்டுக்கு 18,000 ரூபாய் சம்பள உயர்வு இருக்கும். மேலும் ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் வழங்க தமிழக அரசு தயாராவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அறிவிப்புகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
மார்ச் மாதம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அகவிலைப்படியை 4% உயர்த்தியது. அதன்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான உத்தரவை வெளியிட்டார்.
அரசு ஊழியர்களுக்கான மற்றொரு அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பு தீபாவளிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்புக்கு தேவையான ஆவணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலுக்காக அதிகாரிகள் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.மேலும் அலுவலர் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் மாநில அரசு நிதியில் கூடுதலாக ரூ. 3,000 கோடி செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், அலுவலர் அல்லாத ஊழியர்கள் ரூ. 7,000 போனஸ் பெற்றனர், மேலும் இந்த ஆண்டு அந்த தொகையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் குறித்த மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
அரசு தரப்பில் 2-வது அகவிலைப்படி உயர்வு குறித்த தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. அப்படி வெளியிடப்பட்டால் இதன் மூலம் 1 கோடி அரசு ஊழியர்களின் குடும்பங்கள் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செப்டம்பர் மாத இறுதிக்குள் மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications