தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. எவ்வளவு கிடைக்கும்..?

இந்த ஆண்டு இரண்டாவது அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றொரு உற்சாகமான செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாநில அரசு ஊழியர்களுக்கான சிறப்பு தீபாவளி போனஸை விரைவில் வெளியிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் இரண்டாவது அகவிலைப்படி உயர்வில் 3 சதவீத அதிகரிப்பை எதிர்பார்க்கிறார்கள். அப்படியானால் அகவிலைப்படி மொத்தமாக 53 சதவிதாமாக உயர்த்தப்படும் என்று கருதுகின்றனர். உதாரணமாக ஒரு அரசு ஊழியரின் சம்பளம் 50,000 ரூபாய் என வைத்துக் கொள்வோம்.

 தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. எவ்வளவு கிடைக்கும்..?

அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்தால் அவருக்கு மாதம் 1,500 ரூபாய் அதிகமாக கிடைக்கும், அப்படி பார்த்தால் ஆண்டுக்கு 18,000 ரூபாய் சம்பள உயர்வு இருக்கும். மேலும் ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் வழங்க தமிழக அரசு தயாராவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அறிவிப்புகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

மார்ச் மாதம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அகவிலைப்படியை 4% உயர்த்தியது. அதன்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான உத்தரவை வெளியிட்டார்.

அரசு ஊழியர்களுக்கான மற்றொரு அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பு தீபாவளிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிவிப்புக்கு தேவையான ஆவணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலுக்காக அதிகாரிகள் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.மேலும் அலுவலர் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் மாநில அரசு நிதியில் கூடுதலாக ரூ. 3,000 கோடி செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், அலுவலர் அல்லாத ஊழியர்கள் ரூ. 7,000 போனஸ் பெற்றனர், மேலும் இந்த ஆண்டு அந்த தொகையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் குறித்த மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

அரசு தரப்பில் 2-வது அகவிலைப்படி உயர்வு குறித்த தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. அப்படி வெளியிடப்பட்டால் இதன் மூலம் 1 கோடி அரசு ஊழியர்களின் குடும்பங்கள் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செப்டம்பர் மாத இறுதிக்குள் மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+