பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி ,சேலை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என அரசு பொங்கல் பண்டிகையை ஒட்டி பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றோடு இலவசமாக வேட்டி சேலையும் வழங்கி வருகிறது.
இன்னும் பொங்கல் பண்டிகைக்கு 17 நாட்களே இருக்கின்றன. இந்த சூழலில் எப்போது பொங்கல் பரிசு தொகை விநியோகம் செய்யப்படும் இலவச வேட்டி, சேலை எப்போதும் முதல் வழங்கப்படும் என அரசின் அறிவிப்புக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றோடு ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் வழங்கியது . அத்துடன் இலவச வேட்டி ,சேலையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெறக்கூடிய இலவச வேட்டி ,சேலை குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலை விநியோகம் செய்யும் வகையில் அவற்றை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகளை ஐனவரி 10ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. பொங்கல் திருநாள் தொடங்க இன்னும் 17 நாட்கள் மட்டுமே இருப்பதால் இந்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம் அடைந்துள்ளது. 2025 பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நெசவாளர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த வாரம் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிவித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் கூறினார். எனவே ஜனவரி மாத தொடக்கத்திலேயே டோக்கன் வினியோகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications