தமிழ்நாடு அரசு தமிழ் மொழியின் டிஜிட்டல் வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு முக்கியமான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தமிழ் மொழி தொழில்நுட்பத்தில் (LangTech) புதுமையான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரித்து வேகமாக வளர்ச்சி அடைய செய்ய ரூ.2.5 கோடி நிதியை உருவாக்கியுள்ளது. இந்த நிதியுதவி யாருக்கு கிடைக்கும்..?
இயற்கை மொழி செயலாக்கம் (NLP) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழ் மொழிக்கான் லாங்குவேஜ் மாடல்களை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்கும்.
தமிழ் விர்ச்சுவல் அகாடெமி (TVA) மற்றும் Startup TN ஆகியவை இணைந்து சிறப்பு நிதியுதவி திட்டத்தை செயல்படுத்துகின்றன. இது தமிழின் டிஜிட்டல் இருப்பை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும்.

இத்திட்டத்தின் நோக்கங்கள்
இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்னவென்றால் தமிழ் மொழியை AI மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்ப பயன்பாட்டில் முன்னணியில் கொண்டு வருவதாகும். மேலும் இத்திட்டம் மூலம் உலகத் தரம் வாய்ந்த தமிழ் AI கருவிகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி, வழிகாட்டி மற்றும் உலகளாவிய கவனம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி தமிழை டிஜிட்டல் உலகில் பாதுகாக்கவும், புதிய தொழில்நுட்பங்களில் வளர்ச்சி அடையச் செய்யவும் இத்திட்டம் பெரியளவில் உதவும். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தமிழை அடிப்படையாக கொண்டு லார்ஜ் லாங்குவேஜ் மாடல்கள் (LLMs), மெஷின் டிரான்ஸ்லேஷன், சாட்பாட் டூல்ஸ், Speech Recognition, Text Mining, Paraphrasing Tools போன்ற டூல்களை உருவாக்கலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்
இந்த 2.5 கோடி ரூபாய் நிதியை பெற Startup TN அல்லது Startup India இல் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவை. தமிழ் மொழி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

என்ன நன்மை?
இதில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு சம அளவு முதலீடு அல்லது மானியங்கள் வழங்கப்படும். இந்த முதலீடு ப்ராடெக்ட் வளர்ச்சி மற்றும் அறிவுசார் சொத்து (IP) உருவாக்கத்துக்கு உதவும். மேலும், AI மற்றும் தொழில்துறை நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல் கிடைக்கும்.
விண்ணப்ப செயல்முறை
விண்ணப்பங்கள் தமிழ் விர்ச்சுவல் அகாடெமி மற்றும் Startup TN இணையதளங்கள் வழியாக ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஜனவரி 7ஆம் தேதி.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் தேர்வு இரு சுற்றுகளில் நடக்கும் - முதலில் முதலீடு குழு தகுதி மற்றும் இன்னோவேஷனை ஆராயும், பின்னர் திட்ட அனுமதி குழு இறுதி முடிவு எடுக்கும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்தத் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் https://forms.gle/4ejrbJqDAfZ8h4BRA என்ற இணைப்பு வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 044-22209400 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த முயற்சி தமிழ் மொழியின் தொழில்நுட்ப எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கியமான வாய்ப்பாகும்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications