ராணிப்பேட்டை மாவட்டத்தில் மெகா திட்டம்.. 20000 பேருக்கு வேலை முதல்வர் வாக்குறுதி..!

தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 250 ஏக்கர் நிலத்தில் 400 கோடி ரூபாய் செலவில் காலணி உற்பத்தி பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். இந்தத் தொழில் திட்டத்தால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னைக்கு தெற்கே 250 கிமீ தொலைவில் உள்ள பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் ஜேஆர் ஒன் ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.400 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள காலணி உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைத்த போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை திட்டத்தை தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மெகா திட்டம்.. 20000 பேருக்கு வேலை முதல்வர் வாக்குறுதி..!

தனி கொள்கை: கடந்த இரண்டு ஆண்டுகளில் தோல் மற்றும் காலணித் தொழிலில் அரசாங்கம் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டில் காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் துறைகளில் வளர்ச்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொருளாதாரம்: 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறுவது எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. தோல் மற்றும் காலணித் துறையில் தமிழகம் தனது நிலையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

20,000 பேருக்கு வேலை: இத்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி முதலீட்டில் 250 ஏக்கரில் காலணி உற்பத்தி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள்: காலணி உற்பத்தி பூங்கா அமைப்பதன் மூலம், தமிழகத்தில் காலணி உற்பத்தித் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பூங்காவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் காலணி உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படும். இதனால், காலணி உற்பத்தியில் தமிழகத்தின் போட்டித்தன்மை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலணி உற்பத்தித் துறையின் வளர்ச்சி : கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் காலணி உற்பத்தித் துறையின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த தோல் மற்றும் காலணி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கீடு மட்டும் 38 சதவீதம். இதுவே தோல் ஏற்றுமதியில் 45 சதவீதம் தமிழ்நாடு பங்கீட்டை வகிக்கிறது.

முக்கிய பகுதிகள்: தமிழ்நாட்டில் காலணி உற்பத்தி, தோல் பொருட்களை தயாரிக்கும் முக்கிய பகுதிகளாக ஆம்பூர், ராணிப்பேட்டை, வேலூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட், சென்னை, திருச்சிராப்பள்ளி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகும். இந்த மாவட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காலணி உற்பத்தி செய்து வருகின்றன.

அரசின் முயற்சிகள் : காலணி உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கி வருகிறது. இதில், காலணி உற்பத்தி நிறுவனங்களுக்கு மானியங்கள், கடன் வசதிகள், மற்றும் வரிச் சலுகைகள் வழங்குவது ஆகியவை அடங்கும். 2022 ஆம் ஆண்டில், காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை வெளியிடப்பட்டது. இந்தக் கொள்கை காலணி உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு வழி வகுத்து வருகிறது.

எதிர்காலம் : காலணி உற்பத்தித் துறை தமிழகத்தில் ஒரு முக்கிய தொழில்துறையாக மாறி வருகிறது. அரசின் சலுகைகளை ஏற்று தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் காலணி உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் உலகளவில் முன்னோடியாக உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பனப்பாக்கம், பர்கூர், பெரம்பலூர் மற்றும் திண்டிவனம் ஆகிய 4 பகுதிகளை மாநிலத்தின் முக்கிய தோல் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்தளமாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+