இந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு உற்பத்தி மட்டுமில்லாமல் ஐடி, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளமாக ஒரு ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் ஜிசிசி மையங்களை ஈர்க்கும் ஒரு மாநிலமாகவும் தமிழ்நாடு மாறி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய Global capability Center எனப்படும் GCC மையங்களை தற்போது பெரும் அளவில் இந்தியாவில் நிறுவுவதற்கு ஆர்வம் காட்டுகின்றன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு துறையாகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு துறையாகவும் gcc மையங்கள் இருந்து வருகின்றன . ஐடி நிறுவனங்களை விட அதிக சம்பளம் தரக்கூடியவையாக ஜிசிசி மையங்கள் இருப்பதால் இதில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஃபிக்கி மற்றும் அனராக் ஆகிய இரண்டு அமைப்புகளும் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ஜிசிசி மையங்களை ஈர்க்கக்கூடிய ஒரு மாநிலமாக மாறி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .தமிழ்நாட்டில் ஏற்கனவே 250 க்கும் அதிகமான ஜிசிசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் உள்ள மொத்த ஜிசிசி மையங்களில் 10% மையங்கள் சென்னையில் தான் இருக்கின்றன என இந்த அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது . அதேபோல ஜிசிசி மையங்களை அமைக்கும் இரண்டாம் நிலை நகரங்களின் பட்டியலில் கோயம்புத்தூர் முதலிடத்தில் இருக்கிறது.
இந்தியாவிலேயே சென்னை மற்றும் மும்பை ஆகிய இரண்டு நகரங்களில் தான் நாட்டின் 70 சதவீதத்திற்கும் அதிகமான டேட்டா மையங்கள் இருக்கின்றன என தெரிவிக்கும் இந்த நிறுவனம் , தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர் மதுரை ஆகிய மூன்று நகரங்கள் புதிய டேட்டா மையங்களாக மாறி வருகின்றன என குறிப்பிடுகிறது.
தமிழ்நாட்டில் 54 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்படுகின்றன , இந்தியாவிலேயே இது அதிகம் என தெரிவிக்கிறது. அதேபோல 30 சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சென்னை போன்ற தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கிறது என அனராக் நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.சென்னையில் அலுவலக இடங்களுக்கான தேவையும் கிடங்குகளுக்கான தேவையும் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதாக இருக்கிறது என அனராக் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications