தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இனிதே துவங்கியது மட்டும் அல்லாமல் ஆரம்பமே அதிரடி என்ற வகையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பாவிஷ் அகர்வால் ஓலாவின் கிருஷ்ணகிரி தொழிற்சாலையின் வெற்றியில் தமிழ்நாடு அரசின் பங்கீடு குறித்தும், அவருடைய மனைவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் பெருமையாகக் கூறினார்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் தமிழகத்தில் ₹12,082 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், பெகாட்ரான் ₹1,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், டிவிஎஸ் நிறுவனம் அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக ₹5000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்துத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த அறிவிப்பு வெளியானது.

இதன் பின்பு பேசி JSW குழுமத்தின் நிர்வாகத் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால், இந்தியாவிலேயே அதிகத் தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற உண்மை சர்வதேச முதலீட்டாளர்கள் முன்னிலையில் தெரித்தார்.
மேலும் சஜ்ஜன் ஜிண்டால் பேசுகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அதிகத் தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 35000க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளது, இது நாட்டின் மொத்த தொழிற்சாலைகளில் பெரும் அளவீடு என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதாரம். தமிழ்நாடு அரசின் கொள்கை கட்டமைப்பு, தொழிலாளர் சக்தி வாயிலாக $1 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய முடியும். அரசாங்கங்கள் மாறிய போதிலும், கொள்கைகள் தொழில்துறை நட்புடன் இருப்பதாக சஜ்ஜன் ஜிண்டால் கூறினார்.
சரி உண்மையிலேயே மக்களுக்கு என்ன நன்மை? சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் அடிப்படையாக நாம் பெறுவது முதலீடு, ஆனால் இது வெறும் துவக்கப்புள்ளி மட்டுமே. இத்தகைய மாநாட்டின் மூலம் முதலீட்டின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், இதனால் தமிழ்நாட்டு மக்களின் per capita income எனப்படும் தனிநபர் வருமானம் அதிகரிக்க வழி வகுக்கும், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் மேம்படும்.
JSW குழுமம் இன்றைய கூட்டத்தில் சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications