பொங்கல் பண்டிகையொட்டி தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருத்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது, பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்க தொகையை அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சரி இந்த 3000 ரூபாய் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி வாங்குவது..?
அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவை அடங்கும். இதனுடன் வேட்டி, சேலை வழங்கப்படும். இந்த தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
இதன் மூலம் 2.22 குடும்பங்கள் பயன்பெறும். பண்டிகைக்கு முன்பு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஏற்கனவே வேட்டி சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
ரொக்க பரிசு அறிவிப்பு
பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.3,000 ரொக்க பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இந்த ரொக்கம் பண்டிகை தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். இது குடும்பங்களுக்கு நிதி உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி ஒதுக்கீடு மற்றும் செலவு
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பரிசுக்கு மொத்தம் ரூ.693.61 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டு. இது குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
விநியோக ஏற்பாடுகள்
பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்க பரிசு, பொங்கல் தொகுப்பு, வேட்டி சேலைகள் அனைத்தும் நியாயவிலை கடைகள் வழியாக வழங்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாளை முதல் தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று, ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கனை வழங்குவார்கள். இதன் மூலம் தகுதி உடைய நபர் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கம் பரிசு ஆகியவை பெறுவார்கள்.
டோக்கனில் ரேஷன் கடை பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், அட்டை எண், தெரு, டோக்கன் எண் விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தை நோட் செய்து கொண்டு, உங்களது பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பணத்தை பெற்றுக் கொள்ளலாம். தற்போது வெளியாகியுள்ள தகவல் படி பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கம் பரிசு ஆகியவை 8 அல்லது 9 ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications