தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) மாநிலத்தின் பல்வேறு பிரிவின் கீழ் மின் கட்டணத்தை திருத்தியுள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நிதி இழப்புகளை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு மின்சாரம் கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துவது, அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் என மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மின்சார கட்டணங்களில் சுமார் 4.83 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது.

அதன்படி வீட்டு உபயோகத்திற்கு கட்டணம் 20 காசுகள் முதல் 55 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்பட்ட இந்தப் புதிய கட்டணங்களின்படி, வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.40 வரை பல்வேறு பிரிவினருக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடுகளின் கீழ் எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்த பிரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இந்தக் கட்டணங்கள் மாறுபடலாம். இதில், இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் வீட்டு மின்சார நுகர்வோருக்கு மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே கூடுதலாக இருக்கும். அதாவது முன்பு ஒரு யூனிட்டுக்கு 4.60-ஆக இருந்த கட்டணம் தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.80-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இலவச மின்சாரம்: அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், கைத்தறி, விவசாயம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றுக்கு கிடைக்கும் மானியங்கள் இந்த மின்சாரக் கட்டான உயர்வால் தடைபடாது என்றும் கூறப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு 300 யூனிட்கள் வரை பயன்படுத்தும் 35 லட்சம் உள்நாட்டுப் பயனர்களுக்கான புதிய கட்டணமானது மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.15 ஆக இருக்கும். இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட்கள் மற்றும் 500 யூனிட்கள் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கான மின்சாரக் கட்டணம் மாதம் ரூ.25 மற்றும் ரூ.40-ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோ மற்றும் ஹை வோல்டேஜ் மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 35 பைசா அதிகரித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications