தமிழ்நாடு பல விஷயத்தில் முன்னோடியாக இருப்பது போல் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசு செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரிய அளவிலான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்திற்காக சென்னையில் இந்தியாவின் முதல் முழு அமைப்புக்குமான Sovereign AI Park உருவாக்க பெங்களூரை சேர்ந்த சர்வம் AI நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டு உள்ளது தமிழ்நாடு அரசு. இந்த திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகளில் சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இது தமிழ்நாடு அரசு தலைமையில் நடைபெறும் மிகப்பெரிய AI உள்கட்டமைப்பு முதலீடுகளில் ஒன்றாக உள்ளது.

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, தொழில்துறை செயலாளர் அருண் ராய், கைடென்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் டாரேஸ் அஹமது, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி.காமகோடி மற்றும் சர்வம் AI இணை நிறுவனர் பிரத்யுஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தமிழ்நாட்டை SAAS தொழில்நுட்பத்தில் இருந்து AI தொழில்நுட்ப ஹப் ஆக மாற்றும் முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு பின்டெக், SAAS ஆகியவற்றில் முன்னோடியாக இருக்கும் வேளையில் தற்போது தேசிய அளவில் ஏஐ துறையில் முன்னணி மாநிலமாக மாற்றும் முக்கிய நடவடிக்கையாக இந்த Full-Stack Sovereign Al Park இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sovereign Al Park என்றால் என்ன?
இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒரு ஏஐ சேவை பெரிய அளவில் இயங்குவதற்கு தேவையான அனைத்து உயர்தர AI கணினி உள்கட்டமைப்பு, பாதுகாப்பான தரவு அமைப்புகள், லாங்குவேஜ் மாடல் ஆராய்ச்சி ஆய்வகங்கள், AI இன்னோவேஷன் குழுக்கள் மற்றும் AI கவர்னென்ஸ் நிறுவனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படும்.
இந்த Sovereign Al Park அமையும் பகுதி முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலும், பாதுகாப்பிலும் இருக்கும். இதேபோல் இந்த ஏஐ பார்க்கில் டேட்டா, மாடல், கம்பியூட் என ஏஐ கட்டமைப்பில் 3 முக்கிய பகுதிகளும் ஒரே இடத்தில் இருந்து இயக்கும் பாதுகாப்பான கட்டமைப்பையும், லாங்வேஜ் மாடலையும் இந்த ஏஐ பார்க்-ல் உருவாக்க முடியும்.
இந்த திட்டம் மூலம் 1000-க்கும் மேற்பட்ட ஹைடெக், டீப் டெக் வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும். AI ஆராய்ச்சி, ஏஐ இன்பரா இன்ஜினியர்ஸ் போன்ற பல பகுதிகளில் இந்த வேலைவாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உலக தரத்திலான AI தொழில்நுட்பத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை அளிக்கும்.

ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கூறுகையில், "AI தான் எதிர்கால வேலைவாய்ப்புகளை வரையறை செய்யும் என்பதால் இந்த சிறப்பு ஏஐ பூங்கா தமிழ்நாட்டு மாணவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் AI நுகர்வோராக அல்லாமல் உலகளாவிய கிரியேட்டர் அல்லது டெவலப்பராக மாற்றும்" என கூறினார்.
சர்வம் AI நிறுவனம் இந்திய அரசின் IndiaAI திட்டத்தின் கீழ் நாட்டின் முதல் உள்நாட்டு லார்ஜ் லாங்குவேஜ் மாடலை (LLM) உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்டது. இது இந்திய மொழிகள், குரல் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றுக்கு ஏற்ற மாடல்களை உருவாக்க உதவும். இந்த பூங்காவில் சர்வம் AI நிறுவனத்திற்கு அடித்தளமாக அமையும்.
சர்வம் AI (Sarvam AI) என்பது இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றாகும். 2023ஆம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு விவேக் ராகவன் மற்றும் பிரத்யுஷ் குமார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் இதுவரையில் 41 மில்லயன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டியுள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications