இந்தியாவின் "டெட்ராய்ட்" என்றும் அழைக்கப்படும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பகுதியை வகிக்கும் ஆட்டோமொபைல் துறை தற்போது புதிய பரிமாண வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளது. உலகளாவிய மின்சார வாகன (EV) உற்பத்தியில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக மாநில அரசுப் பணியாற்றி வருகிறது. மத்திய அரசும், பிற மாநில அரசுகளுக்கு முன்பாகவே EV துறையில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தியது தான் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
தமிழ்நாட்டில் வின்பாஸ்ட், டாடா மோட்டார்ஸ்-ஜேஎல்ஆர், ஹூண்டாய் மற்றும் போர்டு மோட்டார் போன்ற முக்கிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க முதலீடுகளை மாநிலத்தின் EV துறையில் செய்துள்ளதே இதற்கான சான்று.

தமிழ்நாட்டின் EV மையங்கள்: இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சேலம் மற்றும் சென்னை ஆகிய ஆறு நகரங்களை EV மையங்களாக உருவாக்கியுள்ளது. இந்த நகரங்களில் திறமையான தொழிலாளர்கள், துணை சப்ளையர்களின் நெட்வொர்க் மற்றும் சப்ளை செயின், வலுவான ஆட்டோ மற்றும் ஆட்டோ உதிரிப்பாகங்கள் உற்பத்தி சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் லோஜிஸ்டிக்ஸ் அமைப்புகள் என சகலமும் ஈவி துறைக்குச் சாதகமாக உள்ளது.
வெற்றிக்கான அடிப்படை காரணம்: EV துறையில் அதிகப்படியான முதலீடுகள் பெற முக்கிய காரணமாக இருந்தது தமிழ்நாடு அரசின் சாதகமான தொழில்துறை கொள்கைகள், திறமையான தொழிலாளர்கள் தான். தமிழ்நாடு தற்போது இந்தியாவின் EV உற்பத்தியில் சுமார் 40% பங்கைக் கொண்டுள்ளது, இதில் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அடங்கும். குறிப்பாக, இந்தியாவின் முதல் ஐந்து EV உற்பத்தியாளர்களில் மூன்று தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.
இருசக்கர வாகனத் துறையில் வலுவான இடத்தை பிடித்த நிலையில் தற்போது, தமிழ்நாடு அரசு பயணிகள் வாகனங்களிலும் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையில் EV வாகனங்கள் பிரிவுக்காக ரூ.20,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு EV முதலீடுகள் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன, டாடா மோட்டார்ஸ்-ஜேஎல்ஆர், வின்பாஸ்ட், ராயல் என்ஃபீல்ட், ஹூண்டாய் மற்றும் ஸ்டெலான்டிஸ் ஆகியவை பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் மாதம், இந்தியாவில் உள்ள முன்னணி பன்னாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோன், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் Ë-C3 எலக்ட்ரிக் வாகனங்களைச் சர்வதேசச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்திய ஆட்டோமொபைல் துறையில் தமிழ்நாடு புதிய வரலாறு சாதனை படைத்தது.
வளர்ந்து வரும் சுற்றுச்சூழல்: EV தொழிலில் தமிழ்நாட்டின் வெற்றிக்குப் பங்களிக்கும் ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுவது, ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் 1,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருப்பது பெரும் பலம்.
ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்திக்குச் சென்னை, கோவை, ஓசூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைக்கு முக்கிய பங்கீட்டை வகிக்கிறது.
இதனிடையே செப்டம்பர் 28 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கத்தில் டாடா மோட்டார்ஸ்-ஜேஎல்ஆர் இன் புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்போகிறார். இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக உயர்தர வாகனம் தயாரிக்கப்படுகிறது.
இப்படி படிப்படியாக வளர்ந்து தமிழ்நாடு EV துறையில் அசைக்க முடியாத சக்தியாக மாறி வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications