சென்னையில் ஐடி துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டது டைடல் பார்க் எனும் ஐடி பூங்கா தான். அந்த வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஐடி துறை வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் டைடல் பூங்காக்களை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஓசூர் நகரத்தில் பிரம்மாண்டமான முறையில் டைடல் பார்க் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான சுற்று சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்து இருக்கிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டின் ஆறாவது முக்கிய டைடல் பூங்காவாக ஓசூர் டைடல் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.

ஓசூர் நகரம் உற்பத்தி ரீதியாக பெயர் பெற்றது. ஏற்கனவே இங்கு வாகனம் , மின்சார வாகனம் , ஐபோன்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன, ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த சூழலில் அடுத்ததாக ஐடி மையமாகவும் ஓசூர் மாற இருக்கிறது. இந்த மாற்றத்தை வித்திடப் போவது ஓசூரில் அமைய இருக்கக்கூடிய டைடல் பூங்கா தான்.
தமிழ்நாடு அரசு ஓசூரில் 373 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான டைடல் பூங்கா அமைக்க இருக்கிறது. 5.55 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்த டைடல் புகார் தரைத்தளம் மற்றும் ஒன்பது தளங்களைக் கொண்டதாக திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த டைடல் பூங்கா வடிவம் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்கள் கூட அண்மையில் வெளியிடப்பட்டன.
இந்த சூழலில் தான் டைடல் பூங்கா கட்டமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட்டால் நேரடியாக 6 ஆயிரம் பேருக்கு ஐடி துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஐடி வேலை என்றாலே பெங்களூருக்கு தான் செல்ல வேண்டும் என என்ற நிலை இருந்தது ஆனால் இனி ஓசூர் இளைஞர்களுக்கு தங்களுடைய சொந்த ஊரிலேயே ஐடி வேலை வாய்ப்பு கிடைக்கும். இது ஒட்டுமொத்தமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்திருக்கிறது.
இதுவரை உற்பத்தி மையமாகவும் ஆட்டோமொபைல் துறையின் மையமாகவும் இருந்த ஓசூர் டைடல் பூங்கா பயன்பாட்டுக்கு வந்தவுடன் ஐடி மையமாகவும் மாறப்போகிறது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த உடனேயே ஓசூர் டைலர் பூங்கா கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன் அடிக்கல் நாட்டு பணிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.ஏற்கனவே ஓசூரில் வர்த்தக மையம், அறிவுசார் வழித்தடம், விமான நிலையம் ஆகியவற்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக டைடல் பூங்கா பணிகள் வேகமெடுத்துள்ளன.
More From GoodReturns

எங்கே அமைகிறது பெங்களூருவின் 2ஆவது விமான நிலையம்? பணிகளை துரிதப்படுத்தும் கர்நாடக அரசு..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications

