சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஜூன் 14ஆம் தேதி, 2024 அன்று தமிழ் புதல்வன் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து அதன் பின் உயர்கல்வியை தொடரும் அனைத்து மாணவருக்கும் மாதம்தோறும் ரூ.1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது? போன்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பொதுவாகவே தமிழக பட்ஜெட்டில் அதிக அளவிலான நிதி கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே பெண் கல்வியை ஆதரிக்கும் வண்ணம், புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவியருக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழ்ப்புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுமைப்பெண் திட்டத்தைப் போலவே ரூ.1,000 மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

சென்னையில் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மே மாதம் வெளியான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவர்களை மு.க ஸ்டாலின் பாராட்டினார். அதேபோல 2023ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டிற்கான பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற 1,728 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் அவர் பாராட்டினார்.
தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து மேடையில் பேசிய மு.க ஸ்டாலின், ஏற்கனவே மாணவியருக்கு வழங்கப்படும் ரூ. 1000 குறித்து கூறியுள்ளார். மேலும் இதே போன்ற சூழலை மாணவர்களுக்கும் ஏற்படுத்தித் தரவே இந்த தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க யாரெல்லாம் தகுதியானவர்கள்?: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர், தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர் ஒரு ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். மேலும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அதன் பின் உயர்கல்வி பெறுபவராக இருக்க வேண்டும்.
தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், ஸ்கூல் ஐடி கார்டு, மார்க் சீட், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மொபைல் நம்பர்.
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?: பயிலும் கல்வி நிறுவனங்களில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமா? அல்லது அதற்கென்று பிற இணையதளங்கள் உள்ளனவா? என்பதற்கான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் இதற்கான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவியர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களும் தங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்கள் மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்தத் தொகை கண்டிப்பாக உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கல்வி பயிலும் நேரத்தில், இதுபோன்ற அரசாங்க உதவிகள் கிடைப்பதனால், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களும் தங்களுடைய பெற்றோரை தொந்தரவு செய்யாமல் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications