இந்த உலகை பல தசாப்தங்களாக நிலக்கரி மின்சார உற்பத்தி மூலம் இயக்கப்பட்டு வந்தாலும், இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் என்றும், இதில் இருந்து மீண்டு வர அணு மின்சார உற்பத்தி சிறந்தது என கடந்த சில வருடங்களாக சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஸ்வீடனில் உள்ள மிகவும் பெரிய மற்றும் மதிப்புக்குரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான கே.டி.எச் (KTH) இல் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துகுமார் என்ற மாணவர் ட்விட்டரில் ஒரு பதிவை செய்து பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். அந்த பதிவு அறிவியல் ஆர்வலர்களையும், பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

முத்துகுமாரின் தனது ட்விட்டர் பதிவில், "நான் 10 டன் நிலக்கரிக்கு சமமான பொருளை கையில் வைத்திருக்கிறேன். இது என்னவென்று யூகிக்க முடியுமா?" என்று பதிவிட்டார். இந்த பதிவிற்கு பலரும் பதில் அளித்தனர்.
இந்த சிறிய கோலிக்குண்டு போல் இருக்கும் பொருளின் பெயர் "யுரேனியம் ஆக்சைடு பெல்லட் (U238)".
இந்த யுரேனியம் ஆக்சைடு பெல்லட் ஒன்று ஒரு வீட்டிற்கு ஒரு வருடத்திற்கு மின்சாரம் தரும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. 10 கிராம் எடையுள்ள இந்த பெல்லட், 10 டன் நிலக்கரிக்கு சமம் என்றால் உங்களால் நம்ப முடியுமா.
யுரேனியம் கதிர்வீச்சு கொண்ட பொருள் என்பதால் பலரும் இதை கையில் எடுப்பதால் கதிர்வீச்சு ஆபத்து குறித்து கேட்டனர். இதேபோல் அணு எரிபொருள் மேலாண்மை குறித்தும் பலரும் கேள்வி எழுப்பினர் இதற்கும் முத்துகுமார் பதில் அளித்தார்,
முத்துகுமார் கூறுகையில், "இதன் கதிர்வீச்சு அளவு மணிக்கு சுமார் 60 மைக்ரோ சீவெர்ட் (microS/h) மட்டுமே. இது அவ்வளவு அதிகமாக இல்லை. மேலும், ஒரு காகிதம் அல்லது கையுறை (ஆல்பா கதிர்வீச்சு பாதுகாப்புக்கு போதுமானது) கொண்டு இந்த கதிர்வீச்சை தவிர்க்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
முத்துகுமார் குறிப்பிட்டுள்ளபடி, அவர் புகைப்படத்திலும் கையுறை அணிந்திருந்தார். இது ஆல்பா கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்புக்கு போதுமானது. ஆனால், இந்த பெல்லட் செறிவூட்டப்பட்ட பிறகு, ஆபத்தான காமா கதிர்வீச்சை வெளியிடும் ஆபத்தை கொண்டு உள்ளது.

முத்துகுமார் தனது பதிவில் ஸ்வீடன் அணு எரிபொருள் மற்றும் கழிவு மேலாண்மையில் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்று என கூறினார். அங்கு, ஒவ்வொரு மின்சார நிறுவனமும் தங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு கிலோவாட் (kWh)க்கும் சிறிய தொகையை செலுத்த வேண்டும். இதன் மூலம், ஆராய்ச்சிக்காக இன்று பல பில்லியன் கிரோனர்கள் (ஸ்வீடன் நாணயம்) சேகரிக்கப்படுகிறது எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications