கோவைக்கு ஜாக்பாட்..சூலூர், பல்லடத்தில் செமிகண்டக்டர் பூங்கா.. பட்ஜெட்டில் அறிவிப்பு

இப்போது உலகமே செமி கண்டக்டர்கள் மூலமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. கார்கள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், மொபைல்கள் என நம்மை சுற்றியுள்ள எல்லா சாதனங்களும் செமி கண்டக்டர்கள் இல்லாமல் தயாரிக்க முடியாது. அப்படிப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த செமி கண்டக்டர் தயாரிப்புக்கு பெரிய அளவில் எதிர்காலம் உள்ளது. எந்த நாடு இப்போதே செமி கண்டக்டர் உற்பத்திக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்கிறதோ, எதிர்காலத்தில் அவை அசைக்க முடியாத உலக சக்தியாக மாறும். இதுதொடர்பான பணியில் மத்திய அரசும் தீவிரம் காட்டி வருகிறது.

கோவைக்கு ஜாக்பாட்..சூலூர், பல்லடத்தில்  செமிகண்டக்டர் பூங்கா.. பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்தநிலையில் இன்றைய தமிழ்நாடு மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, மின்னணுத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மின்னணு பொருட்கள் உற்பத்தி வளர்ச்சிக்காகவும் சென்னையில் ரூ.100 கோடியில் செமி கண்டக்டர் ஆய்வகம் அமைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், கோவை மாவட்டம் சூலூர் திருப்பூர் பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும்.

செமி கண்டக்டர் இயக்கம் தொடங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு. ரூ. 400 கோடியில் ஓசூரில் 5 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். தென் மாவட்டங்களில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. மதுரை, கடலூரில் ரூ.250 கோடியில் புதிய காலணி தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரிவுப்படுத்தப்படும்.

ரூ.350 கோடியில் சென்னை கோவளத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். 9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்க ரூ.366 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய புனல்மின் நிலையங்கள் அமைக்க ரூ.11,721 கோடி ஒதுக்கீடு,கடல்சார் வள அறக்கட்டளைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

அதேபோல், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ. 400 கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்படும். சென்னையில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள் ரூ. 85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். புதுக்கோட்டை, அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1920 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். சென்னையில் பெருநகரில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய ரூ.2423 கோடி மதிப்பீட்டில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் . நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ 26.678 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக இது அமையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+