கோவையின் அடையாளமே மாறப் போகுது – வெளியானது மாஸ்டர் பிளான் 2041..

கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக கோயம்புத்தூர் இருக்கிறது. நவீன வளர்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் கோயம்புத்தூர் நகரத்தை மாற்றி அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது .இதற்காக மாஸ்டர் பிளான் 2041 வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒப்புதலின்படி 1287 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட ஒரு நகரமாக கோவை இருக்கிறது . தற்போது தொழில் ரீதியாக கோவை பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. வேலைவாய்ப்புகளும் இங்கே பெருகி வருகின்றன. இதனால் நாள்தோறும் இங்கே மக்கள் தொகை அதிகரிக்கிறது. 2041ஆம் ஆண்டு இங்கே மக்கள் பல லட்சங்களில் உயரும் என கணிக்கப்படுகிறது. எனவே இத்தனை மக்களுக்கும் தேவையான வசதிகளை கொண்ட நகரமாக கோவையை மாற்றிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கோவையின் அடையாளமே மாறப் போகுது – வெளியானது மாஸ்டர் பிளான் 2041..

இதற்காக கோவைக்காக இரண்டாவது முழுமை திட்ட வரைவு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் கோயம்புத்தூர் நகரம் 2041 ஆம் ஆண்டு 1531 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நகரமாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான வரைவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொது மக்களின் கருத்துக்களும் பெறப்பட்டன.

இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மாஸ்டர் பிளான் 2041-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் . 2041ஆம் ஆண்டில் மதுக்கரை ,கருமத்தம்பட்டி ,கூடலூர், காரமடை ஆகிய நான்கு நகராட்சிகள், 21 பேரூராட்சிகள் 66 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய நகரமாக இருக்கும் வகையில் இந்த இரண்டாவது மாஸ்டர் பிளானை தயார் செய்துள்ளனர். மொத்தம் 1531.57 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த நகரம் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது, அந்த கனவுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய நீடித்த நிலை தன்மை கொண்ட வகையிலும் நகரம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த மாஸ்டர் பிளான் போடப்பட்டிருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மிக்க நகரமாக கோயம்புத்தூரை உருவாக்குவதற்கான ஒரு அடித்தளமாக இந்த மாஸ்டர் பிளான் பார்க்கப்படுகிறது.

கோயம்புத்தூர் நகரத்தை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது , வீட்டு வசதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வது ,சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டமும் எப்படி எந்த காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்ற விவரங்கள் அதில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+