கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக கோயம்புத்தூர் இருக்கிறது. நவீன வளர்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் கோயம்புத்தூர் நகரத்தை மாற்றி அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது .இதற்காக மாஸ்டர் பிளான் 2041 வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒப்புதலின்படி 1287 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட ஒரு நகரமாக கோவை இருக்கிறது . தற்போது தொழில் ரீதியாக கோவை பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. வேலைவாய்ப்புகளும் இங்கே பெருகி வருகின்றன. இதனால் நாள்தோறும் இங்கே மக்கள் தொகை அதிகரிக்கிறது. 2041ஆம் ஆண்டு இங்கே மக்கள் பல லட்சங்களில் உயரும் என கணிக்கப்படுகிறது. எனவே இத்தனை மக்களுக்கும் தேவையான வசதிகளை கொண்ட நகரமாக கோவையை மாற்றிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக கோவைக்காக இரண்டாவது முழுமை திட்ட வரைவு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் கோயம்புத்தூர் நகரம் 2041 ஆம் ஆண்டு 1531 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நகரமாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான வரைவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொது மக்களின் கருத்துக்களும் பெறப்பட்டன.
இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மாஸ்டர் பிளான் 2041-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் . 2041ஆம் ஆண்டில் மதுக்கரை ,கருமத்தம்பட்டி ,கூடலூர், காரமடை ஆகிய நான்கு நகராட்சிகள், 21 பேரூராட்சிகள் 66 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய நகரமாக இருக்கும் வகையில் இந்த இரண்டாவது மாஸ்டர் பிளானை தயார் செய்துள்ளனர். மொத்தம் 1531.57 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த நகரம் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது, அந்த கனவுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய நீடித்த நிலை தன்மை கொண்ட வகையிலும் நகரம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த மாஸ்டர் பிளான் போடப்பட்டிருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மிக்க நகரமாக கோயம்புத்தூரை உருவாக்குவதற்கான ஒரு அடித்தளமாக இந்த மாஸ்டர் பிளான் பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூர் நகரத்தை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது , வீட்டு வசதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வது ,சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டமும் எப்படி எந்த காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்ற விவரங்கள் அதில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
More From GoodReturns

2030 தான் இலக்கே!! மாஸாக ஸ்கெட்ச் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!! அடுத்தடுத்த அதிரடி!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications