தமிழக மக்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை!! ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் உங்கள் வீட்டருகிலேயே முகாம்!!

சென்னை: தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறது. அரசு சேவைகளை மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே கொண்டு வரக்கூடிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று முடிக்க வேண்டிய வேலைகளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு நேரடியாக சென்று ஒரே நாளில் முடித்துக் கொள்ள முடியும்.

நலம் காக்கும் ஸ்டாலின் : லட்சக்கணக்கான மக்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பயன்படுத்தி வரும் நிலையில் மக்களுக்கு மற்றொரு நற்செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு இலவசமாக முழு உடல் பரிசோதனை முகாம்களை தொடங்க இருக்கிறது. வரும் சனிக்கிழமை அன்று முதலமைச்சர் ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்.

தமிழக மக்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை!! ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் உங்கள் வீட்டருகிலேயே முகாம்!!

ஆகஸ்ட் 2 முதல் தொடக்கம்: சென்னை மயிலாப்பூரில் ஒரு பள்ளியில் இருந்து இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையில் மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது.

முழு உடல் பரிசோதனை :பொதுவாகவே மக்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். நோய்கள் வரும் முன் காப்பதற்கும், தொடக்கநிலையிலேயே அறிந்து சிகிச்சை பெறுவதற்கும் முழு உடல் பரிசோதனைகள் மிக முக்கியம். இவ்வாறு முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. இந்த சூழலில் தான் தமிழ்நாடு அரசு இந்த புதிய திட்டத்தை கொண்டு வர இருக்கிறது.

இலவச முழு உடல் பரிசோதனை : நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் படி மக்கள் முழு உடல் பரிசோதனைகளை இலவசமாகவும் தங்கள் வீட்டிற்கு அருகிலேயேயும் பெற்று கொள்ள முடியும் . பொதுவாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றால் மக்கள் தனியார் மருத்துவமனைகளில் 15000 ரூபாய் வரை செலவிட வேண்டும் அரசு மருத்துவமனைகளில் 4,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் இவற்றை தவிர்த்துவிடுகின்றனர்.

தமிழக மக்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை!! ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் உங்கள் வீட்டருகிலேயே முகாம்!!

அமைச்சர் தகவல்: அனைவரும் முழு உடல் பரிசோதனை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி முழு உடல் பரிசோதனை மக்களை தேடி வர இருக்கிறது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பொது மருத்துவம், எலும்பியல், மகளிர் மருத்துவம், இதயம், நரம்பியல், தோல், காது மூக்கு தொண்டை , நுரையீரல் உள்ளிட்ட அனைத்து வகையான சோதனைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என கூறியுள்ளார்.

சனிக்கிழமைகளில் முகாம்: தமிழ்நாடு முழுவதும் இருக்க கூடிய மக்கள் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. காலை 9 மணி தொடங்கி மாலை 4 மணி வரை இலவச முழு உடல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் அறிவிப்பு வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

1,256 முகாம்கள் :தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் பரிசோதிக்கப்பட்டு, அவர்களின் மாற்றுத்திறன் சதவீதம் குறித்த சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைவதற்கும் முகாமில் விண்ணப்பம் செய்யலாம்.சென்னையில் 15 இடங்களில் இந்த முகாம் நடைபெற இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+