தமிழகத்தின் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி தொடங்கும் பொங்கல் பண்டிகை ஆனது பல்வேறு தரப்பினரும் வரவேற்று கொண்டாட உள்ளனர். பொங்கல் பண்டிகை ஆனது போகி பண்டிகையில் தொடங்கி, தைபொங்கல், மாட்டுபொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்களுக்கு வெகுவிமரிசையாக கொண்டாட உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக அரசு தமிழக மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன்படி பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக அண்மையில், அறிவித்தது. இந்த நிலையில், தற்போது அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, 2023-2024-ஆம் ஆண்டுக்கான சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில், அனைத்து சி மற்றும் டி குரூப் ஊழியர்களுக்கும் ரூ.3,000 உச்சவரம்புக்கு உட்பட்ட தற்காலிக போனஸ் வழங்கப்படும். அதேபோல், கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்த முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்களைத் தவிர, ஒருங்கிணைந்த ஊதியம் மற்றும் சிறப்பு ஊதிய விகிதத்தில் உள்ள ஊழியர்களுக்கு ரூ.1,000 சிறப்பு தற்காலிக போனஸ் வழங்கப்படும்.
அதேபோல், சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நாட்டுக்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களை கடைக்கோடித் தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications