சென்னை: உலகம் முழுவதுமே பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனையாக புற்றுநோய் இருக்கிறது. புற்றுநோயை பொருத்தவரை ஆரம்ப கட்டத்திலேயே கவனிக்க தவறுவதால் தான் உயிரிழப்பு வரை கொண்டு சென்று விட்டு விடுகிறது. இதனால் தான் மருத்துவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என கூறுகின்றனர்.
புற்றுநோய் சோதனை: குறிப்பாக குடும்பத்தில் ஏற்கனவே யாருக்காவது புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது என்றால் அவர்களின் பிள்ளைகள் ஆண்டுக்கு ஒரு முறை புற்றுநோய் சோதனைகளை செய்து கொள்வது அவசியம் ஆகும். ஆனால் இத்தகைய புற்றுநோய் சோதனைகள் அதிக விலை கொண்டவை என்பதால் பலரும் அவற்றை எடுக்க முன் வருவதில்லை. இந்நிலையில் தான் அனைவரும் பயன்படுத்த கூடிய வகையில் மலிவு விலையில் தமிழ்நாடு அரசு புற்றுநோய் சோதனை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

முழு உடல் பரிசோதனை திட்டம்: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பாக முழு உடல் பரிசோதனை திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன . கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் பிளாட்டினம் பிளஸ் என நான்கு வகை முழு உடல் பரிசோதனை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன .
4 வகையான திட்டம்: கோல்டு திட்டத்திற்கு 1000 ரூபாயும் டைமன்ட் திட்டத்திற்கு 2000 ரூபாயும் பிளாட்டினம் திட்டத்திற்கு 3,000 ரூபாயும் பிளாட்டினம் பிளஸ் திட்டத்திற்கு 4,000 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இதில் ரத்த சர்க்கரை, சிறுநீர் ஆய்வு, கல்லீரல் செயல்பாடு, கிட்னி செயல்பாடு, தைராய்டு , ஈசிஜி, டிரெட்மில் சோதனை என்பன உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தோடு தற்போது புதிதாக தமிழ்நாடு அரசு டைட்டானியம் என்ற ஒரு புதிய மருத்துவ பரிசோதனை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

டைட்டானியம் திட்டம் : டைட்டானியம் திட்டம் மூலம் பல்வேறு வகையான புற்று நோய்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். சில வகை புற்றுநோய்களின் அறிகுறிகள் நமக்கு தென்படுவதற்கு முன்னரே அதன் ஆரம்ப நிலையிலேயே இந்த மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்து விட முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 2,500 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் போதும் 10க்கு மேற்பட்ட புற்று நோய்களை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்துவிட முடியும்.
ரூ.2,500 கட்டணம்: இதே மருத்துவ பரிசோதனையை நாம் தனியார் ஆய்வகங்களில் எடுத்தால் 20,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய் வரை செலவிட வேண்டும், அதில் 10 சதவீத தொகையான 2500 ரூபாயை செலுத்தினாலே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும் சோதனையை பெற்றுக் கொள்ளலாம். கணையம், கல்லீரல், மார்பகம் , கருப்பை, கருப்பை வாய் புற்றுநோய் , தொண்டை புற்றுநோய் என 10க்கும் அதிகமான புற்றுநோய்களை இந்த சோதனை மூலம் கண்டறிய முடியும். PSA, CA 125, CA 19.9, AFP ஆகியவை இந்த சோதனை இடம்பெற்றுள்ளது என கூறும் மருத்துவர்கள் சோதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனையும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications