தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ரேஷன் பொருட்கள் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று சேரக்கூடிய வகையில் தாயுமானவர் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதன்படி தமிழ்நாட்டில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைகளுக்கு அவர்களது வீட்டிற்க்கே மாதம் தோறும் சென்று ரேஷன் பொருட்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படுகின்றன . இவ்வாறு தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும்போது முன்கூட்டியே அந்த முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விடும் .

இதனை அடுத்து வீட்டுக்கே நேரடியாக சென்று அவர்களுக்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு விடும். தமிழ்நாட்டில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 20, 42, 657 முதியவர்களும் 1,27 ,797 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தமாக 21 , 70, 454 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.இவ்வாறு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும்போது குறிப்பிட்ட அந்த ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருக்கக் கூடிய குடும்ப தலைவரின் கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்க்கப்பட்டு அதன் பின்னர் தான் ரேஷன் பொருட்கள் என்பது விநியோகம் செய்யப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு இரண்டு நாட்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வண்டிகளில் ரேஷன் பொருட்களை கொண்டு சென்று நேரடியாகவே இவர்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது. ஏனெனில் இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் அதற்காக மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டும் அல்லது ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் தான் ரேஷன் கடைக்கு செலவு செய்து சென்று பொருட்களை வாங்க வேண்டிய நிலையில் இருந்தனர். ஆனால் இனி அந்த பிரச்சனை அவர்களுக்கு இல்லை.
வீடு தேடி ரேஷன் பொருட்கள் வருவது முதியோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பெரிய உதவியாக இருக்கிறது. ஆனால் இவ்வாறு ரேஷன் பொருட்களைக் கொண்டு வரும்போது அந்த சேல்ஸ் இயந்திரத்தில் சில சமயங்களில் நெட்வொர்க் பிரச்சனை மற்றும் சர்வர் பழுதாவது , செயல்படாமல் போவது உள்ளிட்டவை காரணமாக குறிப்பிட்ட அந்த குடும்பத் தலைவரின் கைவிரல் ரேகை, கண் கருவிழி ஆகியவற்றை சரி பார்ப்பதில் சிரமம் ஏற்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ச்சியாக புகாட் தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில் தான் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் பெறக்கூடிய முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கைரேகை, கண்கருவிழி ஆகியவை பதிவாகவில்லை என்றால் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்டு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. உணவுப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் சிவராசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் .
எனவே தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வழங்கும்போது சர்வர் வேலை செய்யவில்லை என்பன போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் ரேஷன் கடை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட முதியோர் அல்லது மாற்றுத் திறனாளியிடம் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்டு ரேஷன் பொருட்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications