தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக வெகுவிமரிசையாக் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். எனவே பொதுமக்கள் இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு திட்டம் என்பது தொடங்கப்பட்டது. இது கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது
இந்த திட்டம் தொடங்கப்பட்ட நேரத்திலிருந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரை கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த திட்டம் விரிவடைந்து கடந்த சில வருடங்களாக பொங்கல் பரிசுதொகுப்புடன் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று தமிழக அரசு 2025ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு என்னென்ன வழங்கப்படும் என்பதை அறிவித்துள்ளது. அதில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு, இலவச வேட்டி சேலைகள் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கப்பணமாக ரூ.1,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் 2025-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் இடம்பெறாததால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் இடம்பெறாதது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், கடந்த ஆண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிடப்பட்டதாகவும், பேரிடர்களுக்காக மாநில நிதியில் இருந்து செலவு செய்யப்பட்டதாகவும், பேரிடர் நிவாரண நிதியாக ரூ.276 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.37 கோடி மட்டுமே மத்திய அரசு கொடுத்ததாகவும், எனவே இந்த நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றதாக கூறியுள்ளார்.
அதேபோல், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது எனவும், இதற்கான நல்ல சூழல் விரைவில் உருவாகும் என்றும், மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ஐ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications