தமிழ்நாட்டில் மனிதவளத்தைத் திறன்மிக்கதாக்க, ஐடிஐகளை டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைத்து தரம் உயர்த்துகிறது நமது Dravidian Model அரசு என தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்
இதை தொடர்ந்து ஏழை - எளிய, கிராமப்புற மாணவர்களும் இளைஞர்களும் குறைந்த கட்டணத்தில் பயிற்சி பெற்று, நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன் கொண்டவர்களாக வளர இந்த முயற்சி வழிவகுக்கும் என மு க ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவன கூட்டணியில் 71 ஐ.டி.ஐ.களில் ரூ.2877.43 கோடி மதிப்பில் Industry 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்கள் அமைக்கும் இந்த முயற்சியில், இன்று முதற்கட்டமாக ரூ.762.30 கோடி செலவில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்களைத் தொடங்கி வைத்தேன் என முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமையிலான 20 சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 87.5 : 12.5 என்ற முதலீட்டு விகிதத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் முதலீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை 2030க்குள் உயர்த்த வேண்டும் என முக்கிய இலக்குடன் தமிழக அரசு செயல்படுத்தி வரும் வேளையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை உற்பத்தியிலும் ஏற்றுமதி வாயிலாக உயர்த்த வேண்டும் என திட்டமிடப்பட்டு உள்ளது.
இதேவேளையில் தமிழ்நாட்டில் உலக நாடுகளில் இருந்து நிறுவனங்கள் உற்பத்தி தளத்தை அமைக்கும் வேளையில், அதிநிவீன கருவிகள், இயந்திரங்கள் இயங்கும் வகையில் மக்களின் திறன்களை உயர்த்த வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு உருவாக்கப்பட்டது தான் Industry 4.0 மேம்பாட்டு திட்டத்தை கையில் எடுத்தது.
Industry 4.0 திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாட்டில் மனிதவளத்தைத் திறன்மிக்கதாக்க, ஐ.டி.ஐ.களை டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைத்து தரம் உயர்த்துகிறது தமிழ்நாடு அரசு.
இதை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது டிவிட்டரில் முதல்வர் ஸ்டாலின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.763.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள '4.O' தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்து சிறப்பித்தார்.
அதில் ஒன்றாக திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4.O மையத்தினையும் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்து சிறப்பித்தார். மாணவர்கள் மற்றும் திருவெறும்பூர் தொகுதி மக்களின் சார்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications