பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் என அரசின் சேவைகளை பெறுவதற்கு நாம் அரசு அலுவலகங்களுக்கும் இ சேவை மையங்களுக்கும் சென்று காத்திருக்க வேண்டும். இ சேவை மையங்களில் டோக்கன் வாங்கி நாள் முழுவதும் காத்திருக்க வேண்டும்.
அரசு அலுவலகத்திற்கு சென்றால் ஒரே நாளில் வேலை முடிந்துவிடுமா என்றால் முடியாது. சில நாட்களாவது அலைய வேண்டி இருக்கும். ஆனால் இனி எங்கேயும் செல்ல வேண்டாம். நாம் வீட்டில் இருந்தபடியே 50க்கும் அதிகமான அரசு சேவைகளை பெறலாம். இந்த ஒரு வாட்ஸ் அப் நம்பர் உங்கள் போனில் வைத்திருந்தாலே போதும்.

மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அரசின் சேவைகள் எளிமையாகவும் விரைவாகவும் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு வாட்ஸ்அப் சேவையை கொண்டு வந்துள்ளது. நம்ம அரசு என்ற இந்த வாட்ஸ் அப் சேவை வாயிலாக அரசின் பெரும்பாலான சேவைகளை நாம் இருக்கும் இடத்திலெயே பெற்று கொள்ளலாம்.
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள் பெறுதல் உட்பட 50 சேவைகளை தமிழ்நாடு அரசு வாட்ஸ் அப்பிலேயே வழங்க உள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே மக்கள் இனி வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற வாட்ஸ்அப் (whatsapp) எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பெறலாம்.

7845252525 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் வணக்கம் அல்லது ஹாய் என மெசேஜ் அனுப்ப வேண்டும். உடனடியாக select department என்ற லிங்க் வரும். அதனை கிளிக் செய்தால் எந்தெந்த துறை சார்ந்த சேவைகள் பெறலாம் என்பதற்கான லிஸ்ட் காண்பிக்கப்படும். உங்களுக்கு எந்த துறையின் சேவை தேவையோ அதனை கிளிக் செய்து கொள்ளலாம்.
தேவையான விவரங்களை வாட்ஸ் அப்பிலேயே உள்ளிட்டு ஆவணங்களை பதிவேற்றி சான்றிதழ்களை வாட்ஸ் அப்பிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துமே உட்கார்ந்த இடத்திலேயே நடக்கும். இதற்காக ஒரு நாள் வேலைக்கு லீவு போட வேண்டும் பள்ளி கல்லூரிக்கு லீவு போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
பொதுமக்கள் 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணை தங்கள் போனில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். இதற்கு ஒரு மெசேஜ் அனுப்பி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மற்றும் சாதி மற்றும் வருமானம் உள்ளிட்ட தமிழக அரசின் வருவாய் துறை சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.
சென்னையில் இந்த சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மக்களுக்கு இனி அரசு சேவைகள் வாட்ஸ்அப்பில் மிக எளிதாக கிடைக்கும். அதோடு கால தாமதமின்றி விரைவிலேயே சான்றிதழ்கள் கிடைப்பது தான் இதன் முக்கிய நோக்கம் என்றார். விரைவில் இத்துடன் மேலும் பல சேவைகள் இணைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications