தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து பல்வேறு நிதி மற்றும் நிதியியல் சார்ந்த பிரச்சனைகளைக் கையாண்டு வருகிறது.
இந்நிலையில் வருகிற ஜூன் 1ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி தனது மும்பை அலுவலகத்தில், 1500 கோடி ரூபாய் மதிப்பிலான 25 வருட காலப் பத்திரங்களையும் (Securities), 1500 கோடி ரூபாய் மதிப்பிலான 30 வருட காலப் பத்திரங்களையும் பங்கு வடிவில் பொது மக்களிடம் விற்பனை செய்ய உள்ளது.
இந்தப் பத்திரங்களை வாங்க விரும்புவோர் ஜூன் 1, 2021ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் கோர் பேங்கிங் சேவையான E-kuber தளத்தின் வாயிலாகக் காலை 10.30 மணியில் இருந்து ஏல விலையைப் பதிவு செய்யலாம்.
இந்த அறிவிப்பைத் தமிழ்நாட்டு அரசின் நிதியியல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் விருப்பமானவர்கள் இந்தப் பத்திரத்தைப் பெற விண்ணப்பம் செய்யலாம்.