இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு இணையாக ஹைட்ரஜென் வாயுவை எரிபொருளாக பயன்படுத்தும் திட்டம் நாளுக்கு நாள் பெரியதாகி வரும் வேளையில் ஹைட்ரஜென் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தான் அடுத்த 15 முதல் 20 வருடத்தில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயம் செய்யும் சக்தியை பெறும்.
உதாரணமாக தற்போது வளைகுடா நாடுகள் எப்படி தங்களுடைய கச்சா எண்ணெய் வளத்தை வைத்து சர்வதேச பொருளாதாரத்தில் பெரிய அளவிலான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. சொல்லப்போனால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 10 டாலர் உயர்ந்தால் வளரும் நாடுகள் பட்டியலில் இருக்கும் பல நாடுகளில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும்.

கிட்டத்தட்ட இதே ஆதிக்கத்தை ஹைட்ரஜென் வாயு அடுத்த 20 - 30 வருடத்தில் அடையும் அளவுக்கு சக்திவாய்ந்தது. இந்த நிலையில் ஹைட்ரஜென் வாயுவை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும், தமிழ்நாட்டில் இருந்து உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய 3 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது.
Acme, Petronas மற்றும் Hygenco ஆகிய 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பசுமை ஹைட்ரஜென் அதாவது கிரீன் ஹைட்ரஜென் உற்பத்தி செய்வதற்கான தளத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக அடுத்த 6 மாதத்தில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இந்த நிறுவனங்கள் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீன் ஹைட்ரஜென் உற்பத்தி துறைக்காக அடுத்த 2 மாதத்தில் தமிழ்நாடு அரசு தனிக் கொள்கையை வெளியிட உள்ளதாக தெரிவித்த தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தமிழ்நாடு வரும் காலத்தில் குளோபல் கிரீன் ஹைட்ரஜென் ஹப் ஆக மாற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
மத்திய அரசு இந்தியாவில் அடுத்த சில வருடத்தில் இந்தியாவில் மொத்தம் 5 MMT அளவிலான கிரீன் ஹைட்ரஜென்-ஐ உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், தமிழ்நாடு மட்டும் Acme, Petronas மற்றும் Hygenco ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் சுமார் 2 MMT உற்பத்திக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இத்தொழிற்சாலைக்கான பணிகள் அடுத்த 8-9 மாதத்தில் துவங்கும், இதில் சில பணிகள், சில நிறுவனத்தின் பணிகள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் electrolyser manufacturing-க்கு சிறப்பாந பேகேஜ் அளிக்க உள்ளோம், இதோடு இப்பிரிவில் இருக்கும் சவால்களை ஆய்வு செய்ய Guidance Tamil Nadu மற்றும் பிரிட்டன் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications