சென்னை: தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஆறு சேட்டிலைட் நகரங்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு நில கையகப்படுத்துதலுக்கு என ஒரு புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
சென்னைக்கு அருகே இருக்கக்கூடிய திருமழிசை, செங்கல்பட்டு, மீஞ்சூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மாமல்லபுரம் ஆகிய ஆறு நகரங்களும் சேட்டிலைட் நகரங்களாக மேம்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

சேட்டிலைட் நகரங்கள் என்பது நவீன வசதிகள் அனைத்தும் நிறைந்த நகரங்களாக இருக்கும். மெட்ரோ ரயில் இணைப்பு, சாலை கட்டமைப்புகள், தொழில் மையங்கள் என அனைத்து வசதிகளையும் கொண்டவையாக இருக்கும்.
இந்த நகரங்களை மேம்படுத்தும் பணிக்காக நிலம் சேகரிப்பு திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. சிஎம்டிஏ வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ஆறு சேட்டிலைட் நகரங்களிலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, பல்வேறு நவீன மையங்களை அமைப்பது, மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை அமைப்பது மற்றும் அவுட்டர் ரிங் சாலைகள் மற்றும் பிற வசதிகளை நிறுவுவதற்காக நிலம் சேகரிப்பு திட்டமானது பயன்படுத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி சிஎம்டிஏ ஆனது 600 ஏக்கர் பரப்பளவிற்கு நிலத்தை சேகரிப்பதற்கான முன்மொழிவை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக மாடம்பாக்கம், அகரம்தென், கோவிலஞ்சேரி கிராமம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணிகளானது தொடங்கப்படும் என தெரிகிறது.
இந்த நிலம் சேகரிப்பு திட்டம் மூலம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, பொது உள்கட்டமைப்பு, சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கீடு செய்த பிறகு மீதமுள்ள இடங்கள் ஒரே வடிவிலான பிளாட்களாக மேம்படுத்தப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு மேம்படுத்தப்பட்ட அந்த நிலத்தின் மதிப்பு தற்போது இருப்பதைவிட பல மடங்கு உயர்ந்திருக்கும் என்றும் தெரிகிறது. சென்னை மட்டுமின்றி இந்த நிலம் சேகரிப்பு திட்டமானது மாநிலத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் டவுன்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
பொதுவாக தமிழ்நாட்டில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் என்பது தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு திட்ட பணிகள் தொடங்காமல் தாமதமாகின்றன.
எனவே புதிய நிலம் சேகரிப்பு திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கக்கூடிய ஐம்பது சதவிகித உரிமையாளர் ஒப்புதல் அளித்தால் போதும் அரசு அவற்றை கைப்பற்றி மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications