ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்துடன், புதிய மாடல் போன்களையும் இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 5 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் ஏற்றுமதி மதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்த வருடத்தின் இறுதியில் அறிமுகம் செய்ய உள்ள ஐபோன் 15 சீரியஸ் போன்களை அதிகளவில் இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்த எந்த மாடல் போன்களை எவ்வளவு போன்களை தயாரிக்க உள்ளது என்ற தரவுகளை டிரென்ட் போர்ட்ஸ் என்னும் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
டிரென்ட் போர்ட்ஸ் தரவுகள் படி Iphone 15 - பாக்ஸ்கான் 70 சதவீதமும், Luxshare 25 சதவீதமும், டாடா குரூப் 5 சதவீதமும் தயாரிக்க உள்ளது.
Iphone 15 Plus - luxshare 60 சதவீதமும், பெகாட்ரன் 35 சதவீதமும், டாடா குரூப் 5 சதவீதமும் தயாரிக்க உள்ளது.
Iphone 15 Pro - பாக்ஸ்கான் 70 சதவீதமும், பெகாட்ரன் 30 சதவீதமும் தயாரிக்க உள்ளது.
Iphone 15 Pro Max - பாக்ஸ்கான் 70 சதவீதமும், பெகாட்ரன் 25 சதவீதமும் தயாரிக்க உள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பாக்ஸ்கான் இந்தியாவில் மிகப்பெரிய உற்பத்தி தளத்தை வைத்துள்ளது சென்னையில் தான், இதேபோல் சீனாவின் Luxshare காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகில் சுங்குவார்சத்திரம் பகுதியில் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைத்தது.
டாடா குரூப் ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை வைத்து ஏற்கனவே ஐபோன்-க்கான அசம்பிளி செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கூட்டணியான பாக்ஸ்கான், பெகாட்ரன், விஸ்திரான் போன்ற நிறுவனங்கள் மட்டுமே ஐபோன்-ஐ முழுமையாக தயாரிக்கிறது. டாடா ஐபோனின் ஒரு பகுதியை மட்டுமே தயாரிக்கிறது.

தற்போது ஐபோன் 15 சீரியஸ் போன்களை தயாரிக்கும் நிறுவனங்களில் பெகாட்ரன் தவிர அனைத்துமே தமிழ்நாட்டில் தான் உள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனம் பல காரணிகளை கணக்கிட்டு தமிழ்நாட்டை டார்கெட் செய்து ஐபோன்-ஐ தயாரிக்க உள்ளது.
இதன் மூலம் ஆப்பிள்-க்கு இனி வரும் காலத்தில் தமிழ்நாட்டை விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலை இருந்தாலும், பாக்ஸ்கான் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைக்கும் புதிய தொழிற்சாலை மூலம் ஐபோன் உற்பத்தியில் தமிழ்நாட்டின் ஆதிக்கத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்கை பறிக்கலாம்..
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications