சமீபகாலமாக தமிழகம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பல்வேறு முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக ஐடி துறையில் வளர்ச்சி ஆனது கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக தொழில்துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகின்றன. எனவே இந்த முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. இந்த நிலையில், தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அது எதில் தெரியுமா?
ஆம், நாட்டிலேயே அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் 2023-24 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வந்த குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை விட தமிழ்நாடு சிறு, குறு நடுத்தர தொழில்களால் படித்த இளைஞர்களுக்கு தமிழ்நாடு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை தாண்டி தமிழ்நாட்டில் மட்டும் 39,699 சிறு, குறு தொழில்கள் உள்ள நிலையில், அதன் மூலம் 4 லட்சத்து 81 ஆயிரத்து 807 தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தமிழ்நாடு 8 லட்சத்து 42 ஆயிரத்து 720 மனித உழைப்பு நாட்களை கொண்டு ஒட்டுமொத்த அளவில் நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, சராசரியாக தமிழ்நாட்டில் ஒரு தொழிலாளிக்கு 1.75 மனித உழைப்பு நாட்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மகாராஷ்டிரா ஒரு தொழிலாளிக்கு சராசரியாக 1.13 மனித உழைப்பு நாள்களுக்கும். குஜராத் ஒரு தொழிலாளிக்கு சராசரியாக 1.37 மனித உழைப்பு நாள்களுக்கும் மட்டுமே வேலை வாய்ப்புகளை அளிப்பதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விவசாயத்திலிருந்து மாறிய பெரும்பாலான தொழிலாளர்களை சேவைத் துறை இழுத்துள்ளது. என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020-21 தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், கட்டுமானம், சுகாதாரம் மற்றும் சமூக நலன் ஆகிய அனைத்தும் வேலைவாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தமிழக அரசு தமிழ்நாட்டு மக்கள் வளர்ச்சிக்காகவும், படித்த இளைஞர்கள் நலனுக்காகவும் எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல், பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களுக்கு நன்மை அளிக்கும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வருகிறது. இதனால் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது. எனவேதான் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!



Click it and Unblock the Notifications