ஓசூர் மக்கள் கொண்டாட்டம்!! 49,000 வேலைவாய்ப்புகள்.. ரூ.24,307 கோடி முதலீடுகள்! கெத்து காட்டிய அரசு!

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு அரசு பிரத்தியேக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது . இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். ஏற்கனவே தொழில் நகரமாக வளர்ந்து வரக்கூடிய ஓசூர் நகரின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகின.

இந்த மாநாட்டில் மொத்தமாக 24,307 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கக்கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் தகவலின் படி 23,303.15 கோடி ரூபாய் முதலீட்டில் 44 ,870 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் புதிதாக கையெழுத்திடப்பட்டன.

ஓசூர் மக்கள் கொண்டாட்டம்!! 49,000 வேலைவாய்ப்புகள்.. ரூ.24,307 கோடி முதலீடுகள்! கெத்து காட்டிய அரசு!

இது தவிர குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பாக 1003.85 கோடி ரூபாய் முதலீட்டில் 4483 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. எனவே மொத்தமாக 24,307 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இது தவிர முதலமைச்சர் ஸ்டாலின் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திறன் கொண்ட மூன்று முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார் . அதேபோல 7900 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையிலான நான்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு நிறுவனங்களிலும் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

ஓசூர் மக்கள் கொண்டாட்டம்!! 49,000 வேலைவாய்ப்புகள்.. ரூ.24,307 கோடி முதலீடுகள்! கெத்து காட்டிய அரசு!

இந்த முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ஓசூர் திறமையும் புதுமையும் சந்திக்கிற நகரமாக இருக்கிறது தமிழ்நாட்டின் வரைபடத்தில் தனித்து அடையாளம் பெற்ற நகரமாக ஓசூர் திகழ்கிறது இது வளர்ச்சியின் முகம் என பெருமிதம் தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு அரசு நினைத்த பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றால் தொழில் வளர்ச்சி தான் அதற்கு அடிப்படை எனவே தான் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை தன்னுடைய அரசாங்கம் எடுத்து வருகிறது எனக் கூறினார்.

தங்களுடைய ஆட்சி அமைந்த பின் கையெழுத்திடப்பட்ட 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன என அப்போது அவர் சுட்டிக்காட்டினார் . நாட்டில் தொழில் வளர்ச்சி முகமாக ஓசூர் மாறி உள்ளது என குறிப்பிட்ட அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கொண்டு வரப்பட்டிருக்கும் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார் . அடுத்த கட்டமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அக்டோபர் 9 மற்றும் 10ஆம் தேதியில் உலக புத்தொழில் மாநாடு நடைபெற உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது அறிவிப்பு வெளியிட்டார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+