இந்தியாவினை பொறுத்தவரையில் பல பொதுத்துறை நிறுவனங்களும் கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகின்றன. முன்னதாக ஏர் இந்தியா கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த நிலையில், தனியார்மாக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு திட்டமிட்டு வருகின்றது.
இதற்கிடையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் கடும் கடன் பிரச்சனைக்கு மத்தியில் சிக்கித் தவித்து வருவது ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கடன்
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் 370 கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் 4 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் 1,555 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சேலம் போக்குவரத்து கழகம்
சேலம் போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் 221 கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் 11 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது இதன் கடன் தொகை சுமார் 2172 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
விழுப்புரம் போக்குவரத்து கழகம்
இதே விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் கடன் விகிதமானது, கடந்த 2011ல் 227 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் 10 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. தற்போது கடன் தொகை சுமார் 2,247 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மதுரை நிலவரம் என்ன?
மதுரை போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூ.266 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் ரூ.2178 கோடியாக உயர்ந்து உள்ளது.
கும்பகோணம் நிலவரம்?
கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் 339 கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் 7 மடங்கு அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது கடன் தொகை சுமார் 2,478 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சென்னை நிலவரம்
இதே சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கடன் விகிதமானது, கடந்த 2011ல் 586 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் 2,695 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications