சென்னை: தமிழ்நாட்டில் அரசே டாஸ்மாக் நிறுவனம் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 4787 டாஸ்மார்க் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மேற்பார்வையாளர், விற்பனையாளர், துணை விற்பனையாளர் ஆகியோர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் ஊழியர்கள்: தமிழ்நாடு முழுவதும் 6567 பேர் மேற்பார்வையாளர்களாகவும் , 14,636 பேர் விற்பனையாளர்களாகவும், 2426 பேர் துணை விற்பனையாளர்களாகவும் வேலை செய்கின்றனர். டாஸ்மாக் கடைகளில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வந்தனர். இந்த சூழலில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் துணை விற்பனையாளர்களுக்கு 2000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.

சம்பள உயர்வு: கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியே டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது .ஆனால் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த சூழலில் டாஸ்மாக் நிர்வாக குழு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த அடிப்படையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கணக்கீடு செய்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஊதிய உயர்வு குறைப்பு: டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலை கூடுதலாக 10 ரூபாய் மற்றும் அதற்கு மேல் விற்பனை செய்த புகார்களில் சிக்கிய 451 பணியாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வு கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய் மற்றும் அதற்கு மேல் விலை வைத்து விற்பனை செய்து விதிமீறலில் ஈடுபட்டதாக 451 ஊழியர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான ஊதிய உயர்வு வெறும் 1000 ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
451 பேர் மீது புகார்: மூத்த மேலாளர்கள் அளித்த அறிக்கையின் படி பார்க்கும்போது மொத்தம் 4,467 டாஸ்மாக் ஊழியர்கள் எம்ஆர்பியை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் 4,016 பேர் எம்ஆர்பியை விட பத்து ரூபாய்க்கும் கீழ் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தார்களாம், 451 பேர் எம்ஆர்பியை விட 10 ரூபாய்க்கு மேல் விலை வைத்து விற்பனை செய்திருக்கிறார்களாம். இந்த 451 பேரில் 197 பேர் மேற்பார்வையாளர்கள் என்றும் 234 பேர் விற்பனையாளர்கள் என்றும் 20 பேர் துணை விற்பனையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாஸ்மாக் ஊழியர்கள் சம்பளம்: இந்த ஊதிய உயர்வு அறிவிப்பின் மூலம் டாஸ்மாக்கில் வேலை செய்யக்கூடிய மேற்பார்வையாளர்கள் இனி மாதத்திற்கு 14 ,518 ரூபாயை சம்பளமாக பெறுவார்கள். விற்பனையாளராக இருக்கும் நபர் 12,476 ரூபாயையும் துணை விற்பனையாளராக இருக்கக்கூடிய நபர் 11,429 ரூபாயையும் சம்பளமாக பெறுவார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications