இந்தியாவில் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் பல துறைகளுக்கு புதிதாக உற்பத்தி தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதுநாள் வரையில் விமான சேவை நிறுவனங்களுக்கு மென்பொருள் சேவை அளித்து வந்த டாடா, தற்போது விமான போக்குவரத்து சேவையில் இறங்கியது மட்டும் அல்லாமல் தற்போது விமானங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்க உள்ளது.
ஏர்பஸ் நிறுவனத்தின் முக்கிய விமானமான ஏ320 நியோ விமானங்களுக்கான பல்க் கார்கோ மற்றும் கார்கோ கதவுகளை டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று ஐரோப்பிய ஏவியேஷன் நிறுவனமான ஏர்பஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் தயாரிப்பு!
ஏர்பஸின் அறிக்கையின்படி, ஹைதராபாத்தில் உள்ள புதிய தளத்தில் அதிநவீன ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி TASL அதாவது டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் ஏ320 நியோ விமானங்களுக்கான பல்க் கார்கோ மற்றும் கார்கோ கதவுகளை தயாரிக்கும் என தெரிவித்துள்ளது.
இரண்டாவது பெரிய ஒப்பந்தம்!
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா சமீபத்தில் 470 விமானங்களுக்கான ஆர்டர் செய்த சில வாரங்களுக்குப் பிறகு, ஏர்பஸ் உடனான இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. டாடா குழுமம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 270 விமானங்களை வாங்க உள்ளது.
ஏர்பஸ்!
ஏர்பஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட இந்திய சப்ளையர்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் 735 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாகங்கள் மற்றும் சேவைகளை வாங்கி வருகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் single-aisle விமான சந்தையில் ஏர்பஸின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும், ஏ320 திட்டத்தை மேம்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் ஒரு படி முன்னேற்றமாக இருக்கும் என்று ஏர்பஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக்-இன் -இந்தியா!
இந்தியாவின் ஆத்மநிர்பார் திட்டத்தின் மேக் -இன் -இந்தியா உறுதிப்பாட்டை மேம்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் முக்கிய பங்களிக்கும் என ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ரெமி மெயிலார்ட் கூறியுள்ளார்.
ஆத்மநிர்பர் பாரத் இலக்கு
இந்தத் திட்டம் மூலம் உற்பத்தியில் அதிநவீன வடிவமைப்பு, உதிரிபாகங்கள் உற்பத்தி, விமானங்களின் அசெம்பிளி போன்ற தயாரிப்புகளால்'ஆத்மநிர்பர் பாரத்' என்ற இந்திய அரசின் லட்சியத்தை முழுமையாக நிவர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.
குஜராத்
இதுதவிர ஏர்பஸ் நிறுவனம் குஜராத்தில் உள்ள TASL உடன் C295 இராணுவ விமான இறுதி அசெம்பிளி லைனை (FAL) உருவாக்கும், இது தனியார் துறையில் முதல் பெரிய உற்பத்தி திட்டமாகும் என ஏர்பஸ் தெரிவித்துள்ளது.
நம்பகத்தன்மை!
TASL உடனான இந்த ஒப்பந்தம் ஒரு வலுவான நம்பிக்கையை உருவாக்கும் எனவும், இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனத்தின் தொழில்துறையை மற்றும் விமானச் சேவையில் வேகமாக வளரும் என ரெமி மெயிலார்ட் கூறியுள்ளார்.
முன்னேற்றம்
இந்த ஒப்பந்தம் குறித்து Tata Advanced Systems Ltd (TASL) இன் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுகரன் சிங் கூறுகையில், TASL நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்துடன் தொடர்ந்து நல்ல வணிக உறவைக் கொண்டுள்ளது எனவும், இந்த ஒப்பந்தம் மூலம் விமான பாகங்களின் தயாரிப்பு இரண்டு நிறுவனங்களுக்கும் இடையேயான உறவை மேலும் மேம்படுத்தும் எனக் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications