சந்திரசேகரன் கைக்கு வரும் 3 புதிய நிறுவனங்கள்.. அரசு ஓகே சொல்லுமா.. காத்திருக்கும் டாடா..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தகக் குழுமமாக விளங்கி வரும் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமாக விளங்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் பதவியில் இருக்கும் என்.சந்திரசேகரன் கட்டுப்பாட்டில் 3 புதிய நிறுவனங்களைக் கொண்டு வர டாடா குழுமம் மத்திய கார்பரேட் விவகார அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமா..?

டாடா குழுமம் கடந்த 5 வருடத்தில் சந்திரசேகரன் தலைமையில் பல புதிய துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை டாடா குழும நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கும் சரி, டாடா நிர்வாகத்திற்கும் சந்திரசேகரனுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்குவதில் எவ்விதமான தயக்கமும் இருக்காது.

 என். சந்திரசேகரன்

என். சந்திரசேகரன்

என். சந்திரசேகரன் டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் பல நிறுவனங்களின் மொத்த ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மாக இருப்பது மட்டும் அல்லாமல் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ், இந்தியன் ஹோட்டல் கோ, டாடா பவர், ஜாகுவார் லேண்ட் ரோவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சேர்மன் ஆகவும் இருக்கிறார்.

 3 புதிய நிறுவனங்கள்

3 புதிய நிறுவனங்கள்

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் டாடா குழுமத்தில் புதிதாக உருவாகி இருக்கும் ஏர் இந்தியா, டாடா டிஜிட்டல் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களையும் சந்திரசேகரன் கீழ் நேரடி நிர்வாகத்திற்குக் கொண்டு வர இந்த 3 நிறுவனத்திலும் சேர்மன் பதவியை அளிக்க டாடா குழுமம் தற்போது மத்திய கார்பரேட் விவகார அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

 இந்திய நிறுவன சட்டம்

இந்திய நிறுவன சட்டம்

இந்திய நிறுவன சட்டம், 2013 -இன் கீழ், ஒரு தனிநபர் ஒரே நேரத்தில் 20 நிறுவனங்களுக்கு அதிகமாக இயக்குநராகப் பதவி வகிக்க முடியாது. இந்த 20 நிறுவனங்களின் வரம்பில் தனியார் நிறுவனங்கள் மற்றும் மாற்று இயக்குநர்கள் பதவிகளும் அடக்கம். மேலும், 20 நிறுவனங்கள் வரம்பில், ஒருவர் 10 பொது நிறுவனங்களுக்கு மேல் இயக்குநராக இருக்க முடியாது.

 டாடா குழும வழக்கம்

டாடா குழும வழக்கம்

இப்படியிருக்கையில் டாடா குழும வழக்கத்தின் படி டாடா சன்ஸ் சேர்மன், இக்குழுமத்தின் அனைத்து நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருப்பார்கள், இதனால் சந்திரசேகரன் தலைமை வகிக்கும் 3 புதிய நிறுவனங்களுக்கு ஒப்புதல் பெறவே தற்போது டாடா குழுமம் மத்திய கார்பரேட் விவகார அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற காத்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+