இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமம் கடந்த வருடத்திற்கான சம்பளத்தை தனது உயர் அதிகாரிகளுக்கு வழங்கி வரும் வேளையில், எப்போதும் இல்லாத வகையில் பல முன்னணி நிறுவன தலைவர்களுக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.
டாடா குழும நிர்வாகம் உயர் அதிகாரிகளுக்கும், மூத்த நிர்வாக தலைவர்களுக்கும் சம்பளத்தை அளிக்ககொடுக்க முக்கிய காரணம் 2022-23 ஆம் நிதியாண்டில் சுமார் 97 பில்லியன் டாலர் அளவிலான வருவாயை விற்பனை மூலம் பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் பெரிய அளவில் பலன் அளித்து வரும் வேளையில் தற்போது புதிய மகுடமாக 97 பில்லியன் டாலர் வருவாயை பெற்றுள்ளது, டாடா குழுமத்தில் பல முன்னணி நிறுவனங்கள் சுமார் 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் எதிரொலியாக 2022-23 ஆம் நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்கு அதிகப்படியான சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா பவர், டிரென்ட், டாடா கன்ஸ்யூமர் ஆகிய நிறுவன தலைவர்கள் சுமார் 60 சதவீகதம் வரையில் அதிகப்படியான சம்பள உயர்வை பெற்றுள்ளனர்.
டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் நிர்வாக குழுவின் கூட்டம் மே மாதம் நடந்தது, இக்கூட்டத்தில் நீண்ட காலமாக இயங்கி வரும் டாடா நிறுவனங்களில் தங்களின் தேவைக்கான நிதி போதுமான அளவுக்கு உள்ளது. இதேவேளையில் இனி வரும் காலத்தில் டாடா டிஜிட்டல் மற்றும் ஏர் இந்தியாவில் அதிகப்படியான முதலீடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
டாடா குழுமத்தின் கீழ் உலகளவில் 100க்கும் அதிகமான நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், மொத்த வர்த்தக அடிப்படையில் 10 வர்த்தக பிரிவின் கீழ் 30 நிறுவனங்கள் உள்ளது, மீதமுள்ள நிறுவனங்கள் கிளை மற்றும் ஹோல்டிங் நிறுவனங்களாக உள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டில் டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் இந்தியன் ஹோட்டல்ஸ் லாபம் 1003 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த ஆண்டு 248 கோடி ரூபாய் நஷ்டத்தை எதிர்கொண்டது. இதேபோல் வருவாய் 90 சதவீதம் உயர்ந்து 5810 கோடி ரூபாயாக உள்ளது. இதன் மூலம் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சிஇஓ சம்பளம் 37 சதவீதம் உயர்ந்து 18.23 கோடி ரூபாயாக உள்ளது.
இதேவே டாடா குழுமத்தின் ரீடைல் செயின் நிறுவனமான டிரென்ட் லாபத்தில் 10 மடங்கு வளர்ச்சியும், வருவாயில் 80 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது. டிரென்ட் நிறுவனத்தின் சிஇஓ பி.வெங்கடேசலு சம்பளம் 62 சதவீதம் அதிகரித்து 5.12 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டாடா கெமிக்கல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஆர் முகுந்தன் 16% உயர்வுடன் 8 கோடி ரூபாயும், டாடா பவர் சிஇஓ பிரவீர் சின்ஹா, 16% உயர்வுடன் 9 கோடி ரூபாயும், டாடா கன்ஸ்யூமர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுனில் டிசோசா 24% உயர்வுடன் 9.5 கோடி ரூபாயும், வோல்டாஸ் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் பக்ஷி 22% உயர்வுடன் 3.8 கோடி ரூபாயும் சம்பளமாக பெற்றுள்ளனர்.
டிசிஎஸ்-ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் 13% உயர்ந்து ₹29.1 கோடி பெற்றுள்ளார்.
More From GoodReturns

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!



Click it and Unblock the Notifications