டாடா நிறுவனம் பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிபெற்றாலும், Tata Neu என்ற ஈ காமர்ஸ் தளம் பெரிதளவில் மக்களிடம் சென்று சேரவில்லை. இந்த நிலையை மாற்ற, ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான உபர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட டாடா குழுமம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டாடாவின் டிஜிட்டல் தளங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் உபர் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட டாடா குழுமம் திட்டமிட்டிருப்பதாக தி எக்னாமிக் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது. இதன் படி உபர் சேவைகள் டாடா டிஜிட்டல் தளத்துடன் ஒருங்கிணைக்கப்படும் என தெரிகிறது.

டாடா நிறுவனம் பெரிய எதிர்பார்ப்புகளுடன் சூப்பர் அப் என்ற பெயரில் Tata Neu செயலியை அறிமுகம் செய்தது. அமேசான், பிளிப்கார்ட் தளங்களுக்கு இது கடும் போட்டியாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் இந்த ஈ-காமர்ஸ் தளம் பெரிதளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை.
இருப்பினும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இந்த தளத்தில் பல்வேறு மேம்பாடுகளை டாடா நிறுவனம் கொண்டுவந்துள்ளது.
உபர் - டாடா குழும தலைவர்கள் சந்திப்பு: கடந்த ஆண்டு டேவோஸில் நடைபெற்ற மாநாட்டில் உபர் நிறுவன தலைமை செயல் அதிகாரி டாரா கோஸ்ரோஷாஹி மற்றும் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். கூடிய விரைவில் இந்தியா வருகை தர இருக்கும் உபர் நிறுவன தலைமை செயல் அதிகாரி டாரா கோஸ்ரோஷாஹி, மீண்டும் ஒரு முறை சந்திரசேகரனை சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது.
டாடா - உபர் நிறுவனங்களுக்கு இடையிலான உறவு: டாடா மற்றும் உபர் நிறுவனங்கள் ஏற்கனவே மின்சார வாகன துறையில் ஒப்பந்தம் செய்துள்ளன. கடந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் உபர் நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஒப்பந்தத்தில், ஊபருக்கு 25,000 மின்சார வாகனங்கள் வழங்கப்படும் என்று டாடா உறுதி அளித்துள்ளது. இந்த உறவு டிஜிட்டல் தளத்திலும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகரங்களை குறி வைக்கும் டாடா: தற்போதைக்கு இணைந்து செயல்படுவது குறித்து டாடா குழுமம் மற்றும் உபர் நிறுவனங்களில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பின்னர் முழுமையான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஒருவேளை டாடாவும் ஊபரும் இணைந்து செயல்பட்டால் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் தளத்திற்கு அதிக வாடிக்கையாளர்கள் வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நிறுவனங்களுக்கும் இதில் லாபம் கிடைக்கும் என்பதால் இணைந்து செயல்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதென்றே சொல்லப்படுகிறது.
சிறப்பாக செயல்படும் உபர் தலைவர்: உபர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக டாரா கோஸ்ரோஷாஹி கடந்த 2017இல் பதவி ஏற்ற பின்னர், செயலியில் பல புதுமைகளை கொண்டு வந்தார். குறிப்பாக மளிகை சாமான்கள் டெலிவரி உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்தார். அவரது வருகைக்கு பின் உபர் பயனாளர்களின் எண்ணிக்கை 45 மில்லியனில் இருந்து 150 மில்லியனாக அதிகரித்தது.
Story written by: Devika Manivannan
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications