பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது மாபெரும் செமிகண்டக்டர் PLI திட்டத்தின் கீழ் சமீபத்தில் 3 மெகா திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதில் 2 திட்டங்கள் டாடா குழுமத்தை சேர்ந்தது.
இந்த 2 செமிகண்டக்டர் திட்டங்கள் டாடா குழுமத்திற்கும் இந்தியாவுக்கும் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. டாடா குழுமம் தென்னிந்திய மாநிலங்களில் தனது செமிகண்டக்டர் ஆலையை அமைக்கத் திட்டமிட்ட நிலையில் தற்போது அசாம் மற்றும் குஜராத்துக்கு சென்றுள்ளது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தைவான் நாட்டைச் சேர்ந்த பிரபலமான மற்றும் மாபெரும் சிப் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Powerchip Semiconductor Manufacturing Corp (PSMC) நிறுவனத்துடன் இணைந்து, குஜராத்தில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு ஆலையை நிறுவவுள்ளது. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.91,000 கோடி ஆகும்.
டாடாவின் இந்த ஆலை, தொழில் துறை மற்றும் பாதுகாப்பு துறை ஆகிய இரண்டிற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் முதல் முறையாக ஒரு தனியார் நிறுவனம் செமிகண்டக்டர் ஃபேரிகேஷன் துறையில் அடியெடுத்து வைக்கிறது.
இன்று செமிகண்டக்டர் சிப்-கள் டெபிட் கார்டுகள் முதல் மொபைல் போன்கள், வாஷிங் மெஷின்கள் முதல் விமானங்கள், ஏவுகணைகள் முதல் விண்வெளி ராக்கெட்டுகள் வரை அனைத்து மின்னணு சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
அதிகம் மூலதனம் தேவைப்படும் சிப் தயாரிப்பு துறையில் இந்தியாவைக் கவனம் செலுத்த வைக்கும் வகையில், மத்திய அரசு உற்பத்தித்திறன் இணைப்பு ஊக்கத்தொகை (PLI) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த திட்டத்தில அரசின் சலுகை பெற பெரும் போட்டி இருந்தது, அதேபோல் முறையான தொழில்நுட்ப கூட்டணி இல்லாமல் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. இதில் தோல்வி அடைந்த ஒரு நிறுவனம் தான் பாக்ஸ்கான் - வேதாந்தா கூட்டணி.
அனைத்து துறையிலும், அனைத்து சேவையிலும் பயன்படுத்தும் சிப்-களுக்கு சீனா மற்றும் தைவான் போன்ற நாடுகளை மட்டுமே சார்ந்திருப்பது பாதுகாப்பு ரீதியாக ஆபத்தானது என்பதால், சொந்தமாக சிப் தயாரிக்கும் திறனை வளர்த்துக்கொள்வது இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த புதிய சிப் தயாரிப்பு ஆலைகள், தொழில்நுட்ப சுயசார்பு திசையில் இந்தியாவின் புதிய பயணத்தை வலுப்படுத்தும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த வாரம் தெரிவித்தார்.
டாடா குழுமத்தின் இந்த முயற்சி, இந்தியாவின் சிப் தயாரிப்பு கனவை நனவாக்குவதற்கான முதல் படியாகும். இதன் மூலம், இந்தியா எதிர்காலத்தில் உலகளவில் சிப் தயாரிப்பில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications