இந்திய அரசுக்கு சொந்தமான விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா அதிகளவிலான கடனில் இருக்கும் காரணத்தால் இதைப் பல முறை விற்பனை செய்ய முயற்சி செய்து மத்திய அரசு தற்போது டாடா குழுமத்திற்கு விற்பனை செய்துள்ளது.
இந்த விற்பனையில் ஏர் இந்தியா வைத்திருந்த கொச்சி விமான நிலையத்தின் பங்குகளையும் டாடா குழுமம் பெற உள்ளது. இது ஏர் இந்தியா விற்பனை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு இருந்தாலும் வெளியில் தெரியாமல் இருந்தது, இந்தியாவின் 3வது மிகப்பெரிய விமான நிலையத்தின் பங்குகளை டாடா குழுமம் தற்போது பெற உள்ளது.
கொச்சி விமான நிலையம்
தென்னிந்தியப் பகுதிகளிலேயே கொச்சி விமான நிலையம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. வெளிநாட்டுப் பயணிகள் பிரிவில் இந்தியாவில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளை அதிகளவில் இணைக்கும் விமானச் சேவைகளைக் கொச்சி விமான நிலையத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.
வளைகுடா நாடுகள்
கொச்சி மற்றும் கேரளா முழுவதும் வளைகுடா நாடுகளில் அதிகளவிலான வெளிநாட்டு ஊழியர்கள் இருக்கும் காரணத்தால் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. வருடம் முழுவதும் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் மலையாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் கொச்சி விமான நிலையம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இண்டிகோ, ஏர் இந்தியா
இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணைந்து கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஜெட்டா, துபாய், அபுதாபி, ரியாத், ஷார்ஜா, தோஹா, குவைத் போன்ற பல நாடுகளுக்கு விமானச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏர் இந்தியா மட்டுமே
இவ்வளவு முக்கியமான கொச்சி விமான நிலையத்தில் ஓரே ஓரு விமானச் சேவை நிறுவனம் தான் பங்குகளை வைத்துள்ளது, அது ஏர் இந்தியா மட்டுமே. தற்போது ஏர் இந்தியா-வை டாடா குழுமம் வாங்கும் காரணத்தால் கொச்சி விமான நிலைய பங்குகளைத் தற்போது டாடா குழுமம் பெற உள்ளது.
ஏர் இந்தியா விற்பனை
ஏர் இந்தியா விற்பனையில் ஏர் இந்தியா கட்டுப்பாட்டில் இருந்த பல அரசு நிறுவனப் பங்குகள் அனைத்தும் Air India Asset Holding Limited (AIAHL)க்கு மாற்றப்பட்ட நிலையில் கொச்சி விமான நிலைய பங்குகளை மட்டுமே டாடா குழுமம் பெற உள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியா வைத்திருந்த 3 சதவீத பங்குகளை டாடா குழுமம் பெற உள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இதன் மூலம் கொச்சி விமான நிலையத்தில் டாடா குழுமத்தைத் தாண்டி, எஸ்பிஐ, பார்த் பெட்ரோலியம், HUDCO ஆகியவை இணைந்து சுமார் 10 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதேபோல் கேரளா-வை சேர்ந்த ஒரு மசாலா வியாபாரி, மாநில வங்கி, அபுதாபி-ஐ சேர்ந்த ஒரு பில்லியனர் ஆகியோரும் கொச்சி விமான நிலையத்தில் பங்குகளை வைத்துள்ளனர்.
டாடா திட்டம் இதுதானா..?
கொச்சி விமான நிலையத்தில் டாடா குழுமம் வைத்திருக்கும் பங்கு அளவீடு வெறும் 3 சதவீதமாக மட்டுமே இருந்தாலும், இதை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் இந்தியாவில் பிற விமான நிலையங்களை மத்திய அரசு 50 வருடம் அடிப்படையில் குத்தகைக்கு விடத் திட்டமிட்டு வரும் நிலையில் டாடா குழுமம் இதில் பங்குபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications