இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் ரத்தன் டாடா மறைவிற்கு பின்பு அதன் உயர்மட்ட நிர்வாகத்தில் சைரஸ் மிஸ்திரி விவகாரத்திற்கு பின்பு ஒரு பதற்றம் உருவாகியுள்ளது.
டாடா டிரஸ்ட்ஸ் உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலால் தற்போது மத்திய அரசு தலையிட்டு பிரச்சனையை சரி செய்யும் அளவுக்கு சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாடா குழுமம், ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல துறைகளில் செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த 27.85 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாம்ராஜ்ஜியத்தின் தலையாய நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா டிரஸ்ட் சார்பாக யாரை உட்கார வைப்பது என்பதில் தான் தற்போதைய முக்கிய பிரச்சனையாக உள்ளது.
டாடா டிரஸ்ட்ஸ் என்பது டாடா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு அமைப்பு, இந்த அமைப்பு டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66 சதவீத பங்குகளை வைத்துள்ளன, இதன் மூலம் டாடா சன்ஸ் வாயிலாக டாடா குழுமத்தின் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது டாடா டிரஸ்ட்.
இந்த நிலையில் டாடா சன்ஸ் நிர்வாகத்தில், டாடா டிரஸ்ட் சார்பாக உட்கார வைக்கப்படும் நபர் தொடர்பாக சக உறுப்பினர்களிடையே மோதல் தீவிரமடைந்தது, குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலர் விஜய் சிங்கின் மறுநியமனத்தை எதிர்த்து, புதிய நியமன இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த மோதல் டாடா டிரஸ்ட் நிர்வாக குழுவில் இருக்கும் நீண்டகால உறுப்பினர்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. மேலும் இந்த நியணம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா டிரஸ்ட்-க்கு பின் அதிக பங்குகளை வைத்திருக்கும் ஷாப்பூர்ஜி பல்லோன்ஜி குழுமம் போன்ற பிற உரிமையாளர்களின் நலன்களையும் பாதிக்கலாம் என்ற வாதம் எழுத்துள்ளது.

இது நாள் வரையில் ரத்தன் டாடா தான் டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவராக இருந்தார், அவரது மறைவுக்கு வரையில் டாடா டிரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ் மத்தியிலான உறவு சிறப்பாக இருந்தது. இரு அமைப்புகளிலும் ரத்தன் டாடா தேர்வு செய்யும் நபர் தான் இயக்குனர்களாக நியமிக்கப்படுவார்கள்.
ரத்தன் டாடா-வின் ஆதிக்கம் அவருடைய காலக்கட்டத்தில் அதிகமாக இருந்தது, ஆனால் அவரின் மறைவிற்கு பின் நோயல் டாடா, டாடா டிர்ஸ்ட் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். டாடா குடும்ப உறுப்பினராக இருந்தாலும், ரத்தன் டாடா அளவிற்கான ஆதிக்கம் இன்னும் டாடா உயர்மட்ட நிர்வாகத்தில் வரவில்லை.

தற்போது டாடா டிரஸ்ட்ஸ் உள்ள உறுப்பினர்கள் இரு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். ஒரு பக்கம், நோயல் டாடா தலைமையிலான குழு, இதில் வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகியோர் அடங்குவர். இதில் விஜய் சிங் தான் டாடா சன்ஸ் நிறுவனத்தில் மீண்டும் நியமிக்கப்பட்ட இயக்குனர் ஆவார். இவருடைய நியமனத்தை எதிர்த்து தான் மற்றொரு அணி உருவாகியுள்ளது.
மெஹ்லி மிஸ்ட்ரி, பிரமித் ஜாவேரி, ஜஹாங்கிர் ஜஹாங்கிர் மற்றும் டாரியஸ் கம்பாட்டா ஆகியோரின் குழு உள்ளது. இக்குழு விஜய் சிங்கின் மறுநியமனத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த குழு மெஹ்லி மிஸ்ட்ரி-யை டாடா சன்ஸ் இயக்குனராக நியமிக்க வலியுறுத்தி வருகிறது.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஷாப்பூர்ஜி பல்லோன்ஜி குழுமம் சுமார் 18.37 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. டாடா சன்ஸ் நிர்வாகத்தில் எடுக்கப்படும் பல முடிவுகள் வெளிப்படையாக அனைத்து உறுப்பினர்களுக்கும் பகிரப்படுவது இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுவும் புதிய நியமனத்தை எதிர்க்க முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது. அதேபோல் டாடா சன்ஸ் நிறுவனத்தில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் அனைத்து டிரஸ்டிகளுக்கு கிடைக்க மெஹ்லி மிஸ்ட்ரி நியமனம் செய்வது சரியானதாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்த பிரச்சனை டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதிக்கலாம் என்பதால் இந்திய அரசு தலையிட்டு இதற்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இரு மத்திய அமைச்சர்கள் மூலம் டாடா குழுமத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த சந்திப்பு, டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, துணைத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் மற்றும் டிரஸ்ட் உறுப்பினர் டாரியஸ் கம்பாட்டா ஆகியோருடன் இந்த வாரம் டெல்லியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ரத்தன் டாடாவின் முதல் ஆண்டு நினைவு நாளுக்கு (அக்டோபர் 9, 2024) முன்பாக டாடா குழுமத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சனை வெடித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications