டாடா-வின் விஸ்தாரா நிறுவனத்திற்கு புதிய சிஇஓ.. அப்போ ஏர் இந்தியாவுக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய விமானப் போக்குவரத்தில் புதிய மாற்றத்தையும் புதிய போட்டியை உருவாக்கக் காத்திருக்கும் டாடா குழுமம் ஏர் இந்தியா-வை வாங்கிய நிலையில் ஒவ்வொரு நாளும் டாடா குழுமத்தின் அடுத்த அறிவிப்பு என்ன என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

 

1,300% ஏற்றத்தில் 3 கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின், எதரை விடுங்க..இது வேற லெவல்! 1,300% ஏற்றத்தில் 3 கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின், எதரை விடுங்க..இது வேற லெவல்!

 ஏர் இந்தியா தாமதம்

ஏர் இந்தியா தாமதம்

மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியாவை டாடா நிர்வாகத்திடம் ஒப்படைப்பதில் தொடர்ந்து கால தாமதமாகி வரும் நிலையில், டாடா சில முக்கியமான மாற்றங்களைத் தனது விமானச் சேவை நிறுவனத்தில் செய்து வருகிறது.

 விஸ்தாரா, ஏர் ஏசியா

விஸ்தாரா, ஏர் ஏசியா

டாடா குழுமத்திடம் ஏற்கனவே விஸ்தாரா, ஏர் ஏசியா இந்திய என இரு விமானச் சேவை நிறுவனங்கள் உள்ளது. இதில் விஸ்தாரா நிறுவனம் டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கிய கூட்டணி நிறுவனமாகவும்.

 விஸ்தாரா சிஇஓ
 

விஸ்தாரா சிஇஓ


விஸ்தாரா நிறுவனத்தின் தலைவராக இருந்த லெஸ்லி திங் டிசம்பர் 31ஆம் தேதி உடன் இந்நிறுவனத்தை விட்டு விலகிய நிலையில் புதிய சிஇஓ-வாக வினோத் கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். லெஸ்லி திங் விஸ்தாராவின் சிஇஓ-வாக ஜூலை 16, 2017 முதல் டிசம்பர் 31, 2021 வரையில் பணியாற்றினார்.

 தலைமை வர்த்தக அதிகாரி

தலைமை வர்த்தக அதிகாரி

வினோத் கண்ணன் நியமனத்துடன் தீபக் ராஜ்வத் என்பவரை விஸ்தாராவின் தலைமை வர்த்தக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

 வினோத் கண்ணன்

வினோத் கண்ணன்

வினோத் கண்ணன் விஸ்தாரா நிறுவனத்தில் 2019 முதல் பணியாற்றி வருகிறார், ஜூன் 2019ல் தலைமை வியூக அதிகாரி பணியில் சேர்ந்த வினோத், ஜனவரி 2020ல் தலைமை வர்த்தக அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றுத் தற்போது சிஇஓ-வாக உயர்ந்துள்ளார்.

 சிங்கப்பூர் ஏர்லையன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லையன்ஸ்

வினோத் கண்ணன் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தில் சுமார் 20 வருடங்கள் பல்வேறு முக்கியப் பதவிகளில் பணியாற்றி வந்த நிலையில் 2019 முதல் விஸ்தாரா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

 இந்திய விமானத் துறை

இந்திய விமானத் துறை

இந்திய விமானத் துறையின் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் மத்திய அரசு விமான எரிபொருள் விலையை 2.75 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை 2,039.63 ரூபாய் அதிகரித்து 76,062.04 ரூபாய்க்கு அதிகரித்து உள்ளது.

 இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட்

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட்

இதன் வாயிலாக இன்று நாட்டின் முன்னணி விமான நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளது. இண்டிகோ விமானச் சேவை நிறுவனத்தின் பங்குகள் 2005 ரூபாயில் இருந்து 1936.10 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 0.44 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TATA Group vistara got Vinod Kannan as New CEO

TATA Group vistara got Vinod Kannan as New CEO டாடா-வின் விஸ்தாரா நிறுவனத்திற்குப் புதிய சிஇஓ.. அப்போ ஏர் இந்தியாவுக்கு..!
Story first published: Monday, January 3, 2022, 21:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X