தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி மதிப்பிலான டாடா மோட்டார்ஸ் - ஜாகுவார் லேண்ட் ரோவர் (Tata-JLR) உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார்.
இந்தியாவில் முதல் முறையாக சொகுசு கார்கள் வெறும் அசெம்பிளி மட்டுமின்றி முழுமையாக உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை இது என்பதால், தமிழ்நாடு ஆட்டோமொபைல் துறை வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட்ட முதல் கார் ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque) ஐ முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் முன் இருக்கையில் அமர்ந்திருக்க, முதலமைச்சர் தானே காரை ஓட்டி வெளியேற்றினார்.
இந்த தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மார்ச் 2024-இல் கையெழுத்தானது. அடிக்கல் நாட்டப்பட்டது செப்டம்பர் 2024-இல். இன்று (பிப்ரவரி 2026) முதல் கார் வெளியீடு நடைபெற்றுள்ளது. வெறும் 16 மாதங்களில் தொழிற்சாலை தயாரானது தமிழ்நாடு அரசின் விரைவான அனுமதி மற்றும் ஆதரவால் சாத்தியமானது என்று டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் பாராட்டினார்.
ராணிப்பேட்டையில் அமைந்துள்ள இந்த பசுமை தொழிற்சாலை (greenfield facility) மூன்று கட்டங்களாக விரிவாக்கப்பட உள்ளது. முழுமையாக இயங்கத் தொடங்கிய பிறகு ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இது இந்தியாவில் சொகுசு கார்களின் உற்பத்தியில் புதிய அத்தியாயத்தை தொடங்கும். தொழிற்சாலைக்கு அருகில் துணை தொழில்கள் (ancillary units) தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விரிவாக்கத்தில் இன்னும் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில், "வேலைவாய்ப்பு உருவாக்குவது தமிழ்நாடு அரசின் மிக முக்கிய இலக்கு. இதற்காக நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்" என்றார். இந்த தொழிற்சாலை ராணிப்பேட்டை மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சரின் வேண்டுகோள்
இத்தொழிற்சாலையின் துவங்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனிடம், தமிழ்நாட்டில் உயர்தர ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (high-end R&D) தொழில்களை அமைக்குமாறு கோரினார். "அரசு எல்லா வகையிலும் ஆதரவு அளிக்க தயாராக உள்ளது" என்றும் உறுதியளித்தார்.

ரத்தன் டாடா சிலை
ராணிப்பேட்டையில் திறக்கப்பட்டு உள்ள டாடா-ஜாகுவார் லேண்ட் ரோவர் தொழிற்சாலையில் ரத்தன் டாடாவின் திருஉருவ சிலை அமைக்கப்பட்டு, இன்று திறக்கப்பட்டு உள்ளது. வெண்கலத்தால் ரத்தன் டாடாவின் சிலை வடிக்கப்பட்டு இன்று தொழிற்சாலையுடன் சிலையும் திறக்கப்பட்டு உள்ளது.
சென்னையிலிருந்து 115 கி.மீ தொலைவில் உள்ள ராணிப்பேட்டையில் இந்த தொழிற்சாலை அமைந்திருப்பது தமிழ்நாட்டின் தொழில்மயமாக்கல் வேகத்தை உலகிற்கு காட்டுகிறது. சென்னையை தாண்டி புதிய உற்பத்தி நகரம் ராணிப்பேட்டையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
டாடா-ஜேஎல்ஆர் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முழு கார் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications