குஜராத்: டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் இணைந்து கூடிய விரைவில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளன. டாடா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் தான் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள்.
இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் உற்பத்தி ஆலையை நிறுவி எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே தமிழ்நாட்டில் டாடா மோட்டோர்ஸ் நிர்வாகம் ஜாகுவார் லேண்ட்ரோவர் தொழிற்சாலையை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் தலைவராக செயல்படும் நடராஜன் சந்திரசேகரன் ஆட்டோ கார் இந்தியாவிற்கு அளித்துள்ள தகவலில் ஜாகுவார் லேண்ட்ரோவர் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் ஒரே தளத்தில் இரண்டு வித்தியாசமான மாடல்களை உற்பத்தி செய்யப் போகின்றன எனக் கூறியுள்ளார்.
அதாவது குஜராத் மாநிலத்தில் உள்ள சனாந்த் பகுதியில் இந்த உற்பத்தி ஆலை நிறுவப்படுகிறது. இங்கே எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. அடுத்த 12 மாதங்களுக்குள் இதனை நடத்தி முடிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
டாட்டா குழுமத்தை பொறுத்தவரை ஜாக்குவார் லேண்ட்ரோவர் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இணைந்து பெரிய அளவில் தொழிலை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் வடிவமைப்பு மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வளவு பெரிய திட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டுமே தனியாக செயல்படுவது சரியாக இருக்காது என்பதால் தான் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தையும் இணைத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதற்காக குஜராத் மாநிலத்தில் சனாந்த் பகுதியில் உள்ள உற்பத்தி ஆலையை பயன்படுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே டாடா நிறுவனம் இந்த ஆலையில் தான் பேட்டரி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பது தான் பொருத்தமானதாக இருக்கும் என டாடா குழுமம் கருதுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக பேட்டரி தயாரிப்பு மட்டுமின்றி துறைமுக வசதியும் இருப்பதால் குஜராத் மாநிலம் தான் பெரும்பாலும் இதற்கு தேர்வு செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
அதே வேளையில் தமிழ்நாட்டிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாக்குவார் லேண்ட்ரோவர் ஆலையை அமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாக்குவார் லேண்ட்ரோவர் ஆகிய நிறுவனங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செலவின மூலதனமாக 1.5 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளன. இதில் பெரும்பாலான தொகை எலக்ட்ரிக் வாகன பிரிவுக்கு ஒதுக்கப்படும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications