2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாட்டின் பல கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளனர். மாருதி, ஹூண்டாய், மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார், மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா, ஆடி மற்றும் BMW ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில், தற்போது டாடா மோட்டார்ஸ் மற்றும் கியா நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்துள்ளன.
TATA Motors: எலக்ட்ரிக் வாகனம், சிஎன்ஜி வாகன பிரிவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் டாடா மோட்டார்ஸ் தனது பயணிகள் வாகன விலையை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 3% வரை உயர்த்துவதாக திங்கள்கிழமை தெரிவித்தது. கார் தயாரிப்பின் உள்ளீட்டு செலவுகள் மற்றும் பணவீக்கம் அதிகரிப்பை ஈடுசெய்ய இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த 3 சதவீத விலை உயர்வு ஒவ்வொரு கார் மாடலுக்கும், அதன் வகைகளுக்கும் மாறுபடும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
Kia: பிரபலமான கார் பிராண்டான கியா, அதன் முழு மாடல் விலையிலும் 2% விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு 2025 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
கியா நிறுவனம் இந்த விலை உயர்வை அதிகரித்து வரும் சப்ளை சங்கிலி செலவுகளை ஈடு செய்யவே கொண்டு வருவதாக கூறியது. இந்த சவால்களுக்கிடையே, Kia India நிர்வாகம் பெரும் பகுதி செலவுகளை தனது லாப அளவில் இருந்து சரி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கார் விற்பனை மோசமாக இருக்கும் காரணத்தால் கார் தயாரிப்பாளர்கள் இந்த பண்டிகை காலத்தில் அதிகப்படியான விற்பனையை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் பெரிய தள்ளுபடிகள் மற்றும் கவர்ச்சியான சலுகைகளை வழங்கினர்.
பண்டிகை காலம் முடிந்த உடன், புதிய ஆண்டில், புதிய கார்களை விற்பனை செய்வதற்கு முன் விலையை உயர்த்தியுள்ளது ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications