இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், ஹைபிரிட் கார்கள், எலக்ட்ரிக் கார்களை விட அதிக மாசு விளைவிப்பதால், இக்கார்கள் மீதான வரிகளைக் குறைக்க வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளது.
டோயோட்டா ஹைப்ரிட் கார்கள் மீதான வரியை குறைப்பதன் மூலம் மாசுபாடு, எரிபொருள் செலவுகள் குறையும் எனக் கூறி மத்திய அரசிடம் ஹைப்ரிட் கார்கள் மீது வரியை குறைக்க வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் டாடா மோட்டார்ஸ் ஹைப்ரிட் கார்கள் மீதான வரியை குறைக்கக் கூடாது எனக் கூறியுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறையில் வாகனங்களின் டிரெண்ட் வேகமாக மாறி வரும் வேளையில், மத்திய அரசுக்கு மாசுபாட்டையும், எரிபொருள் செலவுகளையும் குறைப்பது முக்கிய இலக்காக இருக்கும் வேளையில்.. சிறு நன்மை கிடைத்தாலும் அதைப் பெரிய அளவில் போற்றத் துவங்கியுள்ளது. இதன் வாயிலாகத் தான் ஹைப்ரிட் கார்கள் மீதான வரியை குறைப்பதற்கான பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது ஹைப்ரிட் கார்கள் வருகை அதிகரித்துள்ளது, டோயோட்டா மற்றும் மாருதி சுசூகி அடுத்தடுத்து ஹைப்ரிட் கார்களை அறிமுகம் செய்து வருவது மூலம் பேட்டரி பாதுகாப்பு, ரேஞ்ச் பிரச்சனையில் தவிக்கும் மக்களுக்கு மாற்றாக ஹைப்ரிட் கார்கள் உள்ளது.
சந்தையில் சிறிய எண்ணிக்கையிலான ஹைப்ரிட் கார்கள் இருந்தாலும், அதன் விற்பனை அதிகம். இந்த நிலையில் ஹைப்ரிட் கார்கள் மீதான வரி குறைக்கப்பட்டால் இதன் விற்பனை அதிகரிக்கும்.
இதனால் எலக்ட்ரிக் கார்களை மட்டுமே நம்பியிருக்கும் டாடா மோட்டார்ஸ்-க்கு பெரும் வர்த்தகப் பாதிப்பாக மாறும் என்பதால், ஹைப்ரிட் கார்களுக்கு வரி குறைக்க வேண்டாம் என டாடா மோட்டார்ஸ் மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளதாக 3 அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஈடி தெரிவித்துள்ளது.
மாசுபாட்டைக் குறைப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எலக்ட்ரிக் வாகனங்களை (EV) இந்தியா ஊக்குவிக்கிறது, அவற்றிற்கு வெறும் 5% வரி விதிக்கிறது. அதே நேரத்தில் ஹைப்ரிட் கார்களுக்கான வரி 43% ஆக உள்ளது. இது பெட்ரோல் கார்களுக்கு விதிக்கப்படும் 48% வரிக்குச் சற்று குறைவாக.
இந்த நிலையில் ஹைப்ரிட் கார்களுக்கு மத்திய அரசு 20 சதவீதமோ அல்லது 30 சதவீதமோ வரியை குறைத்தால், இக்கார்களின் விலை பெரிய அளவில் குறையும். இதனால் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை குறையும் என்பது தான் டாடா மோட்டார்ஸ்-ன் இந்தப் பதற்றத்திற்குக் காரணம்.
டாடா மோட்டார்ஸ்-ன் கோரிக்கை ஹைப்ரிட் கார்களை இந்தியாவில் பிரபலப்படுத்திய ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டோயோட்டாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடும்போது கார்பன் உமிழ்வைக் குறைப்பதாகக் கூறி அவற்றின் மீதான வரிகளைக் குறைக்குமாறு கடந்த ஆண்டு முதல் இந்திய அரசை டோயோட்டா வலியுறுத்தி வருகிறது.
அதன் நிலைப்பாட்டை ஆதரித்து, இந்தியாவின் வர்த்தகத் துறை கடந்த மாதம் ஒரு உள் குறிப்பில் ஹைப்ரிட் கார்கள் மீதான வரிகளை மறுசீரமைப்புச் செய்ய வலியுறுத்தியது.
இந்த நிலையில் தான் டாடா குழும தலைவர், அரசு அதிகாரிகளைச் சந்தித்து, இந்தியாவின் வர்த்தகத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் நகர்ப்புற காற்றின் பாதிப்புகள் மிகவும் மோசமாக உள்ளது, மேலும் ஹைப்ரிட் கார்களுக்கு ஏற்கனவே பெட்ரோல் கார்களை விடக் குறைவான வரி விதிக்கப்படுவதால் கூடுதலாக வரியை குறைத்து ஊக்குவிக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications