சென்னை: இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது எலக்ட்ரிக் கார் தயாரிப்பில், பேட்டரி தொடர்பான பிரச்சனைகளைச் சரி செய்ய, சீனாவின் ஒக்டில்லியன் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடமிருந்து பேட்டரி பேக்குகளை வாங்கப்போகிறது என லைவ் மிண்ட் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் சுமார் 60%க்கும் அதிகமான வர்த்தகத்தை வைத்திருக்கும் டாடா மோட்டார்ஸ், தனது பேட்டரி செயல்திறன் பிரச்சனைகளை சரிசெய்வதற்கும், தனது சப்ளை மற்றும் தொழில்நுட்ப தளத்தை பன்முகப்படுத்தவும் சீன நிறுவனத்திடமிருந்து பேட்டரிகளைப் வாங்கப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் தற்போது டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடமிருந்து தனது கார்களுக்கான பேட்டரிகளைப் பெற்று வருகிறது. டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் இந்தியா மற்றும் உலக நாடுகளில் சுமார் 51 உற்பத்தி தளத்தை வைத்துள்ளது.
ஆனாலும் இந்த பேட்டரி பேக்குகள் டாடா மோட்டார்ஸ் எதிர்பார்க்கும் செயல்திறனைக் கொடுப்பது இல்லை. இதன் எதிரொலியாகச் சீனாவில் இருந்து பேட்டரி பேக்குகளை வாங்குகிறகு டாடா மோட்டார்ஸ். உலகளவில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும், அதன் தொழில்நுட்பத்திலும் முன்னோடியாக இருக்கிறது சீனா.
டாடா மோட்டார்ஸ் தற்போது இந்தியாவில் டியாகோ, டிகார், பஞ்ச், நெக்ஸான் மற்றும் புதிதாக அறிமுகமான கர்வ்.ஈவி ஆகியவற்றின் எலக்ட்ரிக் கார்களை விற்கிறது. விரைவில் டாடா ஹாரியர் காரின் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்த கர்வ்.ஈவி காரில் தான் முதல் முறையாக ஒக்டில்லியன் பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் டாப் 10 அதிக மதிப்புடைய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வரிசையில் நுழைந்த முதல் இந்திய நிறுவனம் டாடா மோட்டார்ஸ் தான். டாடா மோட்டார்ஸின் பங்கு இந்த ஆண்டு 50%க்கும் மேலாக உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 101%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 51 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்தியாவில் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்குகிறது.
டெஸ்லா இன்க் தற்போது உலகின் அதிக மதிப்புடைய ஆட்டோமொபைல் நிறுவனமாக உள்ளது. இதன் சந்தை மூலதனம் 711.19 பில்லியன் டாலர்கள். அதைத் தொடர்ந்து 307.50 பில்லியன் டாலர் மதிப்புடன் டொயோட்டா மோட்டார்ஸ் மற்றும் 92.65 பில்லியன் டாலர் மதிப்புடன் BYD நிறுவனம் உள்ளன.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications