ஆட்டோமொபைல் துறைக்கு இது மிக மோசமான காலம் தான். தொடர்ந்து கடந்த 11 மாதங்களாக பெரும் சரிவைக் கண்டு வரும் நிலையில், தற்போது வரை இதற்கு சரியான தீர்வு காணப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் கடந்த ஞாயிற்றுகிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த நவம்பர் மாதம் 25.32 சதவிகிதம் விற்பனை குறைந்து, 41,124 யூனிட்களாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் 55,074 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே மொத்த உள்நாட்டு விற்பனை 25 சதவிகிதம் சரிந்து, 38,057 யூனிட்களாக விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் 50,470 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே பயணிகள் வாகன விற்பனையானது 10,400 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. இதே கடந்த ஆண்டு இதே மாதத்தில் 16,982 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. இது சுமார் 39 சதவிகித வீழ்ச்சியாகும்.
இதே இந்த நிறுவனம் மொத்த வர்த்தக வாகன விற்பனையானது 19 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதுவே நவம்பரில் 30,588 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தியய ஆண்டில் இதே காலத்தில் 37,957 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களும் கடந்த நவம்பர் மாதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளன.
ஏற்கனவே இத்துறையில் நிலவி வரும் மந்த நிலையால், பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் டாடா மோட்டார்ஸ் கடந்த மாதமே, தன்னார்வ விருப்ப ஓய்வு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த பிரச்சனை இன்னும் நீளும் நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம். அல்லது பணி நீக்கம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.
எப்படி எனினும் ஆட்டோமொபைல் துறையில் நீடிக்கும் இந்த மந்த நிலையானது அரசு புதியதாக கொண்டு வரவிருக்கும், பிஎஸ் 6 விதிகளுக்கு பின்பே சரியாகலாம் என்றும் கருதப்படுகிறது. அதுவரை ஆட்டோமொபைல் துறையில் தற்போது நீடித்து வரும் பிரச்சனையே நீளும் என்றும் கருதப்படுகிறது. அதுவறையிலும் இதுபோன்ற பிரச்சனைகள் அவ்வப்போது தலைதூக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது டாடா மோட்டார்ஸில் மட்டும் அல்ல மற்ற நிறுவனங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications